வீசும் போர்க் களத்து வீ்ழ்ந்த சேனையும் மீளும்; வெய்ய நீசன் போர் வெல்வது உண்டோ?’ என்று உளம் நிலையில் நின்றான்.
பாசம் போய் இற்றாற் போல - (முன்னம் இந்திரசித்து விடுத்த)நாகபாசம் அழிந்து போனதுபோல; பதுமத்தோன்படையும் இன்னேநாசம் போய் எய்தும் - பிரமதேவனுடைய கணையும் இப்பொழுதேநாசமடையும்; நம்பிதம்பிக்கு நடுக்கம் இல்லை - இராமபிரானுடையதம்பிக்கும் அழிவில்லை; வீசும் போர்க்களத்து வீழ்ந்த சேனையும்மீளும் - (படைக்கலங்கள்) எறியப்படும் போர்க்களத்திலேவீழ்ந்துபட்ட சேனைகளும் உயிர்பெற்றெழும்; வெய்ய நீசன் போர்வெல்வதுண்டோ - கொடியவனான அரக்கன் போரில்வெற்றிபெறுவதுண்டாமோ? என்று உளம் நிலையில் நின்றான்- என்று(எண்ணிய) வீடணன் மனம் தடுமாறாமல் ஒருநிலையில் நிற்கப்பெற்றான்.
(8)
‘உணர்வதன்முன்னம், இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த துணைவர்கள், துஞ்சல் இல்லார், உளர்எனின் துருவித் தேடிக் கொணர்குவென், விரைவின்’ என்னா, கொள்ளி ஒன்று அம்கைக் கொண்டான் புணரியின் உதிர வெள்ளத்து, ஒரு தனி விரைவின் போனான்.
உணர்வதன் முன்னம் - “இராமன் உணர்வு வந்து எழுவதற்கு முன்;இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த துணைவர்கள் - இப்பொழுதுதுன்பம் உற்றபோது உதவுவதற்குரிய துணைவர்கள்; துஞ்சல் இல்லார்உளர் எனின் - இறவாதவர்கள் உளராயின்; ‘துருவித் தேடிக்கொணர்குவென் விரைவின்’ என்னா - ஆராய்ந்து தேடிஅழைத்துக்கொண்டு விரைவில் வருவேன்” என்று; கொள்ளி ஒன்றுஅம்கைக் கொண்டான் - கொள்ளிக்கட்டை ஒன்றை கையிலேகொண்டவனாகி; உதிரப் புணரியின் வெள்ளத்து -