பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 645

இரத்தக்  கடற்பெருக்கிலே;     ஒரு  தனி   விரைவிற்போனான்  -
தன்னந்தனியனாய் விரைந்து போனான்.
 

                                                 (9)
 

                                 வீடணன் அனுமனைக் காணல்
 

8712.

வாய் மடித்து, இரண்டு கையும் முறுக்கி, தன் வயிரச்
                                       செங்கண்
தீ உக, கனகக் குன்றின் திரண்ட தோள் மழையைத் தீண்ட
ஆயிர கோடி யானைப் பெரும் பிணத்து அமளி மேலான்,
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக்
                                       கண்டான்.
  

வாய்   மடித்து இரண்டு கையும் முறுக்கி - தன்வாயை மடித்துக்
கொண்டும்,    இரண்டு  கைகளையும்  முறுக்கிக்  கொண்டும்;  வயிரச்
செங்கண்   தீ  உக
  -   பகைமை   உணர்ச்சி  கொண்ட  சிவந்த
விழிகளிலிருந்து  நெருப்புப்  பொறி  சிதற;  கனகக்குன்றின்  திரண்ட
தோள்மழையைத்  தீண்ட
 -  மேருமலையை  ஒத்த  திரண்ட  புயம்
மேகமண்டலத்தைச்  சென்றுதொட;  ஆயிர  கோடி யானைப் பெரும்
பிணத்து  அமளி  மேலான்
-  ஆயிரங்கோடி  யானைகளின்  மிக்க
பிணங்களாகிய  படுக்கைமேல் கிடப்பவனாகிய;  காய்சினத்து அனுமன்
என்னும்    கடல்   கடந்தானைக்  கண்டான்
   -    கொல்லுங்
கோபத்தையுடைய    அனுமன்   என்கின்ற  கடல்  கடந்த  வீரனைக்
கண்டான்.
 

                                                 (10)
 

8713.

கண்டு, தன் கண்களூடு மழை எனக் கலுழி வார,
‘உண்டு உயிர்’ என்பது உன்னி, உடற் கணை ஒன்று ஒன்று
                                            ஆக,

விண்டு உதிர் புண்ணின்நின்று மெல்லென விரைவின் வாங்கி,
கொண்டல் நீர் கொணர்ந்து, கோல முகத்தினைக் குளிரச்
                                         செய்தான்.

 

கண்டு,  தன்  கண்களூடு மழை எனக் கலுழி வார - (அங்ஙனம்
வீடணன்  அனுமனை)    கண்ணுற்று,  (அவன் நிலையினை உணர்ந்து)
தனது விழிகளின் வழியாக மழை போன்று (கண்ணீர்ப்) பெருக்