பக்கம் எண் :

646யுத்த காண்டம் 

கெழுதலால்;      ‘உயிர்உண்டு’ என்பது உன்னி - (இவனுக்கு) உயிர்
உள்ளது என்று அனுமானித்து; உடல் விண்டு உதிர் புண்ணின் நின்று
-  உடல்  பிளவுபட்டு   உதிரம் ஒழுகா நின்ற புண்களிலிருந்து; கணை
ஒன்று ஒன்று ஆக  மெல்லென  விரைவின்  வாங்கி
- அம்புகளை
ஒவ்வொன்றாக  மென்மையாகவும்,  விரைவாகவும் எடுத்து;  கொண்டல்
நீர் கொணர்ந்து   கோலமுகத்தினைக்   குளிரச்    செய்தான்
 -
மேகத்தினின்றும்   தண்ணீரைக்  கொண்டுவந்து    (அவ்வனுமனுடைய)
அழகிய முகத்தைக் குளிருமாறு செய்தான்.
 

                                                (11)
 

         உணர்வு பெற்ற அனுமன், இராமனைப் பற்றி உசாவி அறிதல்
 

8714.

உயிர்ப்பு முன் உதித்த பின்னர், உரோமங்கள் சிலிர்ப்ப
                                            ஊறி
வியர்ப்பு உளதாக, கண்கள் விழித்தன, மேனி மெல்லப்
பெயர்த்து, வாய் புனல் வந்து ஊற, விக்கலும் பிறந்ததாக,
அயர்த்திலன் இராம நாமம், வாழ்த்தினன்; அமரர்
                                       ஆர்த்தார்.

 

உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப-சுவாசம்
முன்னே வந்தபின்பு மயிர்க்கூச்செறிய; ஊறிவியர்ப்பு உளதாக கண்கள்
விழித்தன
 -  வியர்வை  நீர்  ஊறி  வியர்வை  உண்டாகக்  கண்கள்
திறக்கப்பெற்றன; மேனிமெல்லப் பெயர்த்து வாய்புனல் வந்து ஊற -
உடல்மெல்ல அசைய வாயில் நீர் வந்து ஊறிட; விக்கலும் பிறந்த தாக
- விக்கலும் எழுந்ததாக; அயர்த்திலன் ‘இராம நாமம்’ வாழ்த்தினன்-
(அந்த  நிலையிலும்) மறவாதவனாய் இராமநாமம் கூறி    வாழ்த்தினான்;
அமரர் ஆர்த்தார் - அதுகண்டு தேவர்கள் ஆரவாரித்தனர்.
 

மரண     நிலையிலிருந்து வாழ்வு  நிலைக்கு  வரும் உயிர்களுக்கு
மெய்யின்கண் ஏற்படும்  மெய்ப்பாடுகள்  எங்ஙனமிருக்கும் என்பதனை,
சுவாசம்   முன்னேவருதல்,    மயிர்க்கூச்செறிதல்,  வியர்வை  வருதல்,
உடல்    அசைவு,     வாயில்   நீர்   ஊறுதல்,   விக்கல்   எழுதல்
முதலானவற்றைக்         கூறுகின்றமையைக்          காண்கிறோம்.
மரணத்-துன்பத்திலும்    இராமநாமத்தை    மறவாத      அனுமனின்
இராமபக்தி  ஈண்டு  சுட்டப்படுகின்றது.  மயங்கிக்   கிடந்த  காலத்தும்
ஆழ்மனத்தில் இராமநாமம் பதிந்திருந்தமை நினையத்