பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 647

தக்கது.     ‘நான்   மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே’    என்ற
சுந்தரர்  வாக்கிற்குப்  பொருள்  ஈதென  உணரலாம்.   மூர்ச்சிப்பதற்கு
முன்  மனத்தில்  இருந்த  இராமநாமத்தின் தொடர்ச்சி   விழிப்புணர்வு
வரும்போது மீளத் தோன்றியது என்பது உளவியல் உண்மை.
 

                                                (12)
 

8715.

அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர,
தழுவினன் அவனை, தானும் அன்பொடு தழுவி, ‘தக்கோய்!
வழுஇலன் அன்றே, வள்ளல்?’ என்றனன்; ‘வலியன்’
                                        என்றான்;
தொழுதனன், உலகம் மூன்றும் தலையின்மேல் கொள்ளும்
                                         தூயான்.

 

அழுகையோடு   உவகை  உற்ற  வீடணன்  -   அழுகையோடு
மகிழ்ச்சியும்  அடைந்த வீடணன்; ஆர்வம் கூர, தழுவினன் அவனை
-  ஆர்வம்  பொங்க  அவ்வனுமனைத்  தழுவிக்கொண்டான்;  தானும்
அன்பொடு  தழுவி
- அனுமன் தானும் வீடணனை அன்போடு தழுவி;
‘தக்கோய்!  வழு  இலன்  அன்றே   வள்ளல்?’   என்றனன்  -
‘தகுதியுடையோனே!   வள்ளலாகிய   இராமன்  தீங்கில்லாது   உளன்
அன்றே?’  என்று  வினவினான்;  ‘வலியன்’ என்றான் -  (வீடணனும்)
‘வழுவின்றி   வலியனாக  உளன்’  என  விடை  கூறினான்;   உலகம்
மூன்றும்  தலையின்மேல்  கொள்ளும் தூயோன்  தொழுதனன்
-
(அதுகேட்டு      மகிழ்ச்சிப்      பெருக்கால்)      மூவுலகத்தோரும்
தலைமேற்கொண்டு   போற்றத்தக்க   தூய்மை    உடைய   அனுமன்
இராமனைத் தொழுதனன்.
 

                                                (13)
 

                   இருவரும் சாம்பனைத் தேடிச் சென்று அடைதல்
 

8716.

அன்பு தன் தம்பிமேல் ஆத்து, அறிவினை மயக்க, ஐயன்,
துன்பொடும் துயிலன் ஆனான்; உணர்வுஇனித் தொடர்ந்த
                                        பின்னே
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென்!’ என்றலோடும்,
‘தன் பெருந் தகைமைக்கு  ஒத்த சாம்பன் எத்  தலையன்?’
                                        என்றான்.