தன் தம்பி மேல் அன்பு ஆத்து அறிவினை மயக்க- ‘தன் தம்பி மேல் கொண்ட அன்பு தனது அறிவினை மயக்கியதால்; ஐயன் துன்பொடு துயிலன் ஆனான் - இராமன் துன்பத்தோடு கலந்த துயிலுடையவனாக (மூர்ச்சித்தவனாக) ஆனான்; இனி உணர்வு தொடர்ந்த பின்னே - இனி அவனுக்கு உணர்வு வந்தபின்; என்புகுந்து எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும் - என்ன நடக்கும் என்பதனை அறியேன்’ என்று வீடணன் கூறியவுடன்; தன் பெருந்தகைமைக்கு ஒத்த சாம்பன் எத்தலையன் என்றான் - (அனுமன் வீடணனை நோக்கி) தன் பெருந்தகைமைக்கு ஒத்த (மூப்பினை உடைய) சாம்பன் எவ்விடத்து உள்ளான்!’ என்று வினவினான். | (14) | | 8717. | ‘அறிந்திலென் அவனை; யாண்டும் கண்டிலென்; “ஆவி யாக்கை பிறந்திலன், உளன்” என்று ஒன்றும் தெரிந்திலென், பெயர்ந்தேன்’ என்று செறிந்த தார் நிருதர் வேந்தன் உரைசெய, காலின் செம்மல், ‘இறும் திறம் அவனுக்கு இல்லை; நாடுதும், ஏகி’ என்றான். | யாண்டும் கண்டிலென் அவனை அறிந்திலென் - அச்சாம்பனை எவ்விடத்தும் கண்டிலேன், ஆதலால் அவனைப் பற்றி ஒன்றும் அறிந்திலேன்; ‘ஆவி யாக்கை பிறிந்திலன்; உளன்’ என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் - உயிர் உடம்பினின்றும் நீங்கப் பெற்றானோ அன்றி உயிரோடு உளனோ என ஒன்றும் தெரியாதவனாய் வந்துள்ளேன்; என்று செறிந்ததார் நிருதர் வேந்தன் உரைசெய - என் நெருங்கிய மலர்மாலையை அணிந்த அரக்கர் வேந்தனாகிய வீடணன் கூற! காலின் செம்மல், ‘இறும்திறம் அவனுக்கு இல்லை,’நாடுதும், ஏகி,’ என்றான் - காற்றின் மகனான அனுமன், ‘இறக்கும் தன்மை அவனுக்கு இல்லை. ஆதலால், நாம் சென்று அவனைத் தேடுவோம்’ என்று கூறினான். | சாம்பவன் சிரஞ்சீவிகளில் ஒருவன்; ஆகவே, அவன் இறந்திருக்க முடியாது என்பது அனுமன் கருத்து. | (15) |
|
|
|