பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 649

8718.

‘அன்னவன்தன்னைக்  கண்டால்,  ஆணையே,  அரக்கர்க்கு
                                          எல்லாம்
மன்னவ! நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன்’
என்னலும், ‘உய்ந்தோம், ஐய! ஏகுதும் விரைவின்’ என்றான்;
சில் நெறி இருளில் சென்றார்; சாம்பனை விதியில்
                                       சேர்ந்தார்.
 

அரக்கர்க்கு எல்லாம் மன்னவா!-“அரக்கர்க்கு எல்லாம் அரசனே!;
அன்னவன்   தன்னைக்  கண்டால்  - அந்த  சாம்பனைக் கண்டால்;
ஈண்டு நம்மை வாழ்விக்கும் உபாயம் வல்லன் - இப்பொழுது நம்மை
வாழ்விக்கும்   உபாயங்  கூறுதலில்  வல்லவன்  அவனே; ஆணையே
என்னலும்
 -  இது  உறுதியே”  என்று  (அனுமன்)  கூறியதும்; ‘ஐய!
உய்ந்தோம்  ஏகுதும்  விரைவின்’  என்றான்
 -  (வீடணன்)  ஐய,
வாழ்ந்தோம்  விரைவாகச்  செல்லுவோம் என்றான்; சில்நெறி இருளில்
சென்றார்
 -   (இருவரும்)  சிறிது  தொலைவு  இருளில் சென்றார்கள்;
சாம்பனை  விதியில் சேர்ந்தார்  -  சாம்பனை ஆகூழ் கூட்டுவிக்கச்
சென்று சேர்ந்தனர்.
 

ஆணை     - உறுதி என்ற பொருளில் வந்தது. விதியில் சேர்ந்தார்
என்றது,   அவ்வளவு   பரந்துபட்ட   போர்க்களத்தில்  சாம்பனைக்
காணுதல்   அருமையே   ஆயினும்   ஆகூழ்   கூட்டுவித்தமையால்
இருவரும் அவனைக் கண்டனர் என்பதற்காம்.
 

                                                (16)
 

8719.

எரிகின்ற மூப்பினாலும், ஏவுண்ட நோவினாலும்,
அரிகின்ற துன்பத்தாலும், ஆர் உயிர்ப்பு அடங்கி, ஒன்றும்
தெரிகின்றது இல்லா மம்மர்ச் சிந்தையன்எனினும், வீரர்
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான், செவிகளால்-வயிரத்
                                       தோளான்.

 

எரிகின்ற மூப்பினாலும்   -   வருத்தத்திற்குக்       காரணமான
கிழத்தன்மையாலும்;   ஏவுண்ட     நோவினாலும்    -    அம்புகள்
தைத்ததனாலான    துன்பத்தாலும்;   அரிகின்ற   துன்பத்தாலும்  -
(நண்பர்களெல்லாம் இறந்துபட்டனரே என எண்ணுவதால்)