பக்கம் எண் :

650யுத்த காண்டம் 

நெஞ்சம்  புண்ணாகும்  நெடுந்துயராலும்; ஆர்  உயிர்ப்பு  அடங்கி -
அருமையான மூச்சு அடங்கப் பெற்று; ஒன்றும் தெரிகின்றது இல்லா -
ஒன்றும்  தெரியவியலாத;  மம்மர்ச்  சிந்தையன் எனினும் - மயக்கம்
மிக்க  மனத்தான்  என்றாலும்;  வயிரத் தோளான் - வயிரம் போன்ற
தோள்களை   உடைய   சாம்பவன்;   வீரர்   வருகின்ற  சுவட்டை
செவிகளால்  ஓர்ந்தான்
 - வீரர் இருவர் வருகின்ற அடையாளத்தைக்
(காலடி ஓசையைக்) காதுகளால் ஓர்ந்து அறிந்தான்.
 

                                                (17)
 

8720.

‘அரக்கனோ?   என்னை  ஆளும்  அண்ணலோ?
                                அனுமன்தானோ?
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ? முனிவரேயோ?
வரக் கடவார்கள், அல்லர்; மாற்றலர், மலைந்து போனார்;
புரக்க உள்ளாரே!’ என்னாக் கருதினன், பொருமல்
                                      தீர்ந்தான்.
 

அரக்கனோ?  என்னை   ஆளும்  அண்ணலோ?    அனுமன
தானோ?
-வீடணனோ  அல்லது  என்னை  ஆட்கொண்ட இராமனோ?
அல்லது அனுமன்தானோ?; இரக்கம் உற்று அருள வந்த   தேவரோ
முனிவரேயோ?
 -  இரக்கங்கொண்டு  (இத்துன்பத்தை   நீ்க்கி) அருள்
செய்ய வந்த தேவரோ? முனிவர்களோ?; மாற்றலர் மலைந்து போனார்
வரக்கடவார்கள் அல்லர்
 -  பகைவர்கள் போர் செய்து வெற்றியுடன்
சென்றார்களாதலின்,  அவர்கள் (இவ்விரவில்) வரமாட்டார்கள்;  ‘புரக்க
உள்ளாரே’ என்னாக் கருதினன் பொருமல்  தீர்ந்தான்
-  (எனவே)
‘இப்போது   வருபவர்கள்   எம்மைக்   காப்பாற்றும்    தன்மைஉள்ள
அன்பரே ஆவர்’ என எண்ணி மனத்துயர் நீங்கப் பெற்றவனானான்.
 

                                                (18)
 

                         அனுமன் வருகையால் சாம்பன் மகிழ்தல்
 

8721.

வந்து அயல் நின்று, குன்றின் வார்ந்து வீழ் அருவி மானச்
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார்தம்மைத் தேற்றி,