பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 651

‘அந்தம் இல் குணத்திர்! யாவிர், அணுகினிர்?’ என்றான்;
                                          ‘ஐய!
உய்ந்தனம்; உய்ந்தோம்!, என்ற வீடணன் உரையைக
                                      கேட்டான்.

 

வந்து  அயல்நின்று - வந்து தன்பக்கத்தில்   நின்று     கொண்டு;
குன்றின் வார்ந்து வீழ் அருவிமானச் சிந்திய   கண்ணின்  நீரர்-
குன்றிலுருகி    வீழ்கின்ற    அருவிபோலச்      சிந்திய   கண்ணீரை
உடையவராய்;  ஏங்குவார்  தம்மைத்  தேற்றி -ஏங்குகின்றவர்களைத்
தேற்றி;  ‘அந்தமில் குணத்திர் யாவிர்  அணுகினிர்?’   என்றான் -
முடிவில்லாத  குணத்தை  உடையவர்களே!  என்னன அணுகிய   நீவிர்
யாவிர்?  என  வினவிய  சாம்பவன்; ஐய, ‘உய்ந்தனம்! உய்ந்தோம்!!’
என்ற   வீடணன் உரையைக்  கேட்டான்
 -  ‘ஐய’,   வாழ்ந்தோம்,
வாழ்ந்தோம் என்ற வீடணன் சொல்லைக் கேட்டான்.
 

                                                 (19)
 

8722.

‘மற்று அயல் நின்றான் யாவன்?’ என்ன, மாருதியும்,
                                       ‘வாழி!
கொற்றவ! அனுமன் நின்றேன்; தொழுதனென்’ என்று
                                         கூற,
‘இற்றனம், ஐய! எல்லோம் எழுந்தனம், எழுந்தேம்!’
                                        என்னா,
உற்ற பேர் உவகையாலே, ஓங்கினான், ஊற்றம் மிக்கான்.

 

‘மற்று அயல்  நின்றான்  யாவன்? என்ன - (வீடணனை அவன்
உரையால் அறிந்து கொண்ட   சாம்பவன்)’ பின்பு, பக்கத்தில் நின்றவன்
யார்?’ என்று கேட்க, மாருதியும்,   கொற்றவ! வாழி! அனுமன் நின்றேன்;
தொழுதனென்’  என்று  கூற  -  அனுமனும், ‘வெற்றியை உடையாய்!
வாழி!  அனுமன்  நிற்கின்றேன்,  தொழுதேன்’  என்று  சொல்ல; ஐய!
இற்றனம் எல்லோம் எழுந்தனம், எழுந்தேம் என்னா
- (சாம்பவன்)
ஐயா, இறந்துபட்ட எல்லோரும் உயிர்  பெற்று எழுந்தோம், எழுந்தோம்
என்று   கூறியவனாய்; உற்ற பேர்   உவகையாலே, ஊற்றம்மிக்கான்
ஓங்கினான்
  -   உள்ளத்தில்   உற்ற  பெருமகிழ்ச்சியாலே  வலிமை
மிக்கவனாய்ப் பூரித்தான்.

  

                                                (20)