பக்கம் எண் :

652யுத்த காண்டம் 

         சாம்பன், மருத்துமலை கொணர வழிகூறி அனுமனை ஏவுதல்
 

8723.

‘விரிஞ்சன்தன் படை என்றாலும், வேதத்தின் வேதம
                                        அன்ன
அரிந்தமன்தன்னை ஒன்றும் ஆற்றிலது என்னும் ஆற்றல்
தெரிந்தனென்; முன்னே, அன்னான் செய்தது என்?
                              தெரித்தி’
என்றான்;
‘பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான், பெரும!’
                                       என்றான்.

 

விரிஞ்சன்தன்  படை  என்றாலும் - பிரமனுடைய   படைக்கலன்
(பிரமாத்திரம்)  ஆனாலும்;  வேதத்தின்  வேதம் அன்ன அரிந்தமன்
தன்னை
- வேதத்திற்கும் மேலான   வேதம் போன்றவனும் பகை வரை
அழிக்க  வல்லவனுமான  இராமனை;  ஒன்றும்  ஆற்றிலது  என்னும்
ஆற்றல்  முன்னே  தெரிந்தனன்
- ஒன்றும் செய்யாது என்பதற்குரிய
அவனுடைய  ஆற்றலை முன்னமே   தெரிந்திருக்கின்றேன்; அன்னான்
செய்தது  என்?  தெரித்தி என்றான்
- ‘அப்பெருமான் செய்த செயல்
என்ன?   தெரிவிப்பாயாக!’  எனச்  சாம்பன்  வினவினான்;   ‘பெரும!
பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான் என்றான்
-‘பெருமானே!
பெருந்தகையான  இராமன்  துன்ப வெள்ளத்தினால் தோன்றிய துயிலில்
இருக்கின்றான்’    (துன்பத்தினால்     உணர்விழந்து   கிடக்கின்றான்)
என்றான் (அனுமன்)
 

                                                (21)
 

8724.

‘அன்னவன்தன்மை கண்டால் ஆற்றுமோ? ஆக்கை வேறே;
இன் உயிர் ஒன்றே; மூலத்து இருவரும் ஒருவரேயால்;
இன்னது கிடைப்பத் தாழாது, இங்கு இனி
                           இமைப்பின்முன்னம்,
கொன் இயல் வயிரத்தோளாய்! மருந்து போய்க் கொணர்தி’
                                             என்றான்.
 

மூலத்து  இருவரும்  ஒருவரேயால் -  இராமஇலக்குவர்   ஆகிய
இருவரும்   தமக்கு   மூலமான  தெய்வநிலையில்    ஒருவரே  ஆவர்;
ஆக்கை வேறே  இன் உயிர் ஒன்றே - (இப்போதும்) உடம்பு மட்டும்
வேறு, இனிய உயிர் இருவருக்கும் ஒன்றாகும்; அன்னவன் தன்மை