பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 653

கண்டால்     ஆற்றுமோ - ஆதலால்   அந்த  இலக்குவன்  இறந்து
கிடக்கும்  நிலையைக்  கண்டால்  ஆற்றி  இருப்பானோ?    (ஆற்றாது
மூர்ச்சையுறல்  இயல்பே);  கொன்இயல்  வயிரத்தோளாய் - வலிமை
பொருந்திய  வயிரம் போன்ற தோள்களை உடையவனே!   (அனுமனே);
இன்னது கிடைப்பத் தாழாது  இங்கு  இனி இமைப்பின் முன்னம்-
இத்துன்பநிலைக்கு   மிகுதியும்   தாழ்த்தல்  செய்யாது    இனி  இங்கு
கண்ணிமைப் பொழுதிற்கு  முன்னமேயே; ‘மருந்துபோய்க கொணர்தி’
என்றான்
- (உயிர்கொடுக்கும்) மருந்து போய்க் கொண்டு  வருக என்று
சாம்பன் கூறினான்.
 

                                                (22)
 

8725.

‘எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும்,
முழுதும் இவ் உலகம் மூன்றும், நல் அற மூர்த்திதானும்,
வழு இலா மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த!
பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது
                                         போதி.

 

மைந்த!     -   வலிமையுள்ளவனே!   (அனுமனே!)      எழுபது
வெள்ளத்தோரும்  இராமனும்  இளைய கோவும்
-  எழுபதுவெள்ளம்
வானரச்  சேனையும்,  இராமனும்,  இலக்குவனும்; முழுதும் இவ்உலகம்
மூன்றும் நல் அற மூர்த்தி தானும்
- இம் மூவுலகம் முழுவதும்  நல்ல
தருமதேவதையும்; வழுஇலர் மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும்-
தவறுதல்  இல்லாத வேதமும் உன்னால் (நீ மருந்து கொண்டு  வந்தால்)
வாழ்ந்தன ஆகும்; இறைபொழுது தாழாது என்சொல் நெறிதரக்கடிது
போதி
 -  ஆதலால்  சிறிது  போழ்தும்  காலந்தாழ்த்தாது  என்சொல்
நினக்கு வழியைக் கொடுக்க விரைந்து செல்வாயாக.
 

                                                (23)
 

வேறு
 

8726.

‘பின்பு உளது இக் கடல் என்னப் பெயர்ந்ததற்பின்
      யோசனைகள் பேச நின்ற
ஒன்பதினாயிரம் கடந்தால், இமயம் எனும்
      குலவரையை உறுதி; உற்றால்,