பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 67

கொழுத்து விட்டு அழன்று எரி - கொழுத்து விட்டு வெப்பத்தோடு
எரிகின்ற;   மடங்கல்  கூட்டு  அற  -  ஊழித்தீயையும்   ஒப்பென்று
சொல்லா  அளவு; எழுந்து எரி வெகுளியான் - மேன் மேலும் எழுந்து
எரிகின்ற சினத்தை உடையவன் ஆகிய இராவணன்;  இரு  மருங்கினும்
தொழும்  தகை  அமைச்சரை
 -  (தன்)  இரு  பக்கத்திலும் இருந்து
தொழுகின்ற  தன்மை  உள்ள  அமைச்சர்களை; சுளித்து நோக்குறா -
மிக்க சினத்தோடு பார்த்து; இடியொடு முகிலும் சிந்த மொழிந்தனன் -
இடியோடு  மேகங்களும்  சிதறிக்  கீழே  விழுமாறு  பெருங்குரல் படப்
பேசலானான்.

இராவணன்     அமைச்சரைப் பார்த்து மிகச் சினந்து இடியோடு
முகிலும்  சிந்திச்  சிதற  வெடிபடப் பேசினான். மடங்கல் - ஊழித்தீ.
கூட்டு  -  ஒப்பு,  சுளித்து  -  சினந்து,  முகம் சுளித்து எனினுமாம்.
ஏகாரம் இசைநிறை.

                                                    (1)

7728.‘ஏகுதிர், எம் முகத்து எவரும்-என்னுடை
யோக வெஞ் சேனையும், உடற்றும் உம்முடைச்
சாகரத் தானையும், தழுவச் சார்ந்து, அவர்
வேக வெஞ் சிலைத் தொழில் விலக்கி வீட்டிரால்.

என்னுடை  யோக வெஞ்சேனையும் - என்னுடைய சூழ்ச்சித் திறம்
மிக்க    கொடிய   படையும்;   உம்முடைச்   சாகரத்தானையும்   -
உங்களுடைய கடல் போல் பரந்த  பெருஞ்சேனையும்; தழுவச் சார்ந்து
-  ஒன்றாகச் சேர்ந்து; அவர் உடற்றும் -  அப்பகைவர்கள் மாறுபட்டுச்
செய்யும்; வேக வெஞ்சிலைத்தொழில்  விலக்கி  வீட்டிரால்  -  மிகு
வேகத்தோடு   கூடிய  கொடுமையான  வில்லின்  தொழிலை   விலக்கி
மீளத்தக்கவர்  அல்லர்  ஆயினீர்;  எவரும்  எம்  முகத்து ஏகுதிர் -
(அதனால்)  யாவரும்  என்  முகத்து  எதிரில்   நிற்காமல்   (அப்பால்)
சென்று விடுங்கள்.

யோகம்  -  சூழ்ச்சி,  ஏகுதிர் - முன்னிலைப் பன்மை வினை முற்று,
சாகரத்தானை - உவமைத்தொகை. ஆல் - அசை.

                                                   (2)

7729.‘"எடுத்தவர் இருந்துழி எய்தி, யாரையும்
படுத்து, இவண் மீடும்" என்று உரைத்த பண்பினீர்!
தடுத்திலீர் எம்பியை; தாங்ககிற்றிலீர்;
கொடுத்திலீர், உம் உயிர்; வீரக் கோட்டியீர்.