எடுத்தவர் இருந்துழி எய்தி - நம்மேல் போர் எடுத்தவரான (இராமலக்குவர்) இருக்கும் இடம் சென்று; யாரையும் - எல்லோரையும்; படுத்து இவண் மீடும் - அழித்து இங்கு மீண்டு வருவோம்; என்று உரைத்த பண்பினீர் - என்று கூறிய பெரு வீரப் பண்பு உடையவர்களே; எம்பியைத் தடுத்திலீர் - என் தம்பியை இறப்பில் இருந்து தடுத்தீர்களில்லை; தாங்ககிற்றிலீர் - அவனுக்குத் தீங்கு நேராமல் காப்பாற்றினீருமல்லீர்; உம் உயிர் கொடுத்திலீர் - அவனுக்காக உங்கள் உயிரைக் கொடுத்தீர்களுமில்லை; வீரக் கோட்டியீர் - (அப்படியிருந்தும் நீர்) வீரர் வரிசையில் உள்ளீர் என்றபடி.
|
நீர் பேசியது வெறும் வாய்வீரம் மட்டுமே. செயல் வீரம் உங்களிடம் இல்லை என்கிறான் இராவணன். எடுத்தவர் - படைகொண்டு போருக்கு வந்தவர். கோட்டி - குறைவு எனினுமாம். ‘நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் என்று (குறள் 401) வள்ளுவர் கூறியது ‘அவை’ என்னும் பொருளில்.
|
(3)
|
7730. | ‘உம்மையின் நின்று, நான் உலகம் மூன்றும் என் வெம்மையின் ஆண்டது; நீர் என் வென்றியால் இம்மையில் நெடுந் திரு எய்தினீர்; இனிச் செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால்.
|
உம்மையின் நின்று - நெடுங்காலத்துக்கு முன்னிருந்து; நான் உலகம் மூன்றும் ஆண்டது - நான் மூன்று உலகங்களையும் வென்று அடிப்படுத்தி ஆண்டது; என் வெம்மையின் - எனது பெரு வலிமையால் (ஆகும்); நீர் என் வென்றியால் - நீங்கள் எனது வெற்றி காரணமாக; இம்மையில் நெடுந்திரு எய்தினீர் - இப்பிறவியில் மிக்க செல்வத்தைப் பெற்றீர்; இனிச் செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால் - இனிமேல் ஆவது செம்மையான (வீரப் பண்பு கொண்டு) உங்கள் இனிமையான உயிரைக் கொடுத்து கடமையைத் தீர்த்தவராமின்.
|
உம்மையின் நின்று - நெடுங்காலத்துக்கு முன்னிருந்து, வெம்மை - பெருவீரம் (பராக்கிரமம்)
|
(4)
|
7731. | ‘"ஆற்றலம்" என்றிரேல் என்மின்; யான், அவர் தோற்று, அலம்வந்து உகத் துரந்து, தொல் நெடுங் கூற்று அலது உயிர் அது குடிக்கும், கூர்த்த என் வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால். |