பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 689

பெருந்திறல்     அனுமன்  ஈண்டு  உணர்வு  பெற்றுளான் -
பெருவன்மைபடைத்த   அனுமன்   இப்போது   தன்னினைவு  எய்தப்
பெற்றனன்;அருந்துயர்  முடிக்குறும்  அளவு  இல்  ஆற்றலான் -
(நமக்கு  ஏற்பட்டுள்ள)   நீக்குதற்கரிய   துன்பத்தைத் தீர்த்து வைக்கக்
கூடிய  அளவற்ற  ஆற்றல்களை உடையவன் அவன்; மருந்து இறைப்
பொழுதினில் கொணரும் வாய்மொழி பொருந்தினன்
 - (ஆதலால்
அவன்  இறந்தவரை   எழுப்புகின்ற)  ”மருந்தினை  இமைப்பொழுதில்
கொணர்வாயாக”  என்ற  என்னுடை மொழியை ஏற்றவனாய்; வடதிசை
கடிது போயினான்
- வடதிசை நோக்கி விரைந்து போயிருக்கின்றான்.
 

                                                (85)
 

8788.‘பனி வரை கடந்தனன், பருப்பதங்களின்
தனி அரசு அதன்புறம் தவிர்ந்து சார்ந்துளான்,
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும்
துனி வரு துன்பம் நீ துறத்தி, தொல்லையோய்!
 

பனிவரை       கடந்தனன்    -      (அனுமன்   இப்போது)
இமயமலையைக்கடந்து;  பருப்பதங்களின்  தனிஅரசு   அதன்புறம்
தவிர்ந்து
  -  மலைகட்கெல்லாம்  ஒப்பற்ற  அரசாகியமேருமலையின்
புறத்தை   நீங்கி;   சார்ந்துளான்   -   அம்மருந்துள்ள  மலையைச்
சார்ந்திருக்கின்றான்;  இனி  ஒரு கணத்தில்வந்து எய்தும் - இன்னும்
ஒரு  கணப்  போதில்  வந்து  சேர்ந்துவிடுவான்;  தொல்லையோய் -
பழமையானவனே! ஈண்டுறும் துனிவருதுன்பம் நீ துறத்தி - இங்கு நீ
அடைகின்ற   மனம்  கலங்குதற்குக்   காரணமான  பெருந்துன்பத்தை
விடுவாயாக.
 

                                                 (86)
 

8789.

‘யான் அலால், எந்தையாய் உலகை ஈன்றுளான் -
தான் அலால், சிவன் அலால், நேமி தாங்கிய
கோன் அலால், எனைவரும் உணரும் கோள் இலர்,-
வேனிலான் மேனியாய்!-மருந்தை மெய் உற.
 

வேனிலான்  மேனியாய் - வசந்தகாலத்திற்கிறைவனாகிய மன்மதன்
போன்ற  மேனி  அழகு  உடையவனே!  யான்  அலால் எந்தையாய்
உலகை ஈன்றுளான் தான் அலால்
- யான் அல்லது, என் தந்தையாய்
இவ்வுலகைப்  படைத்தவனாகிய  பிரமன்  அல்லது;  சிவன்  அலால்,
நேமிதாங்கிய கோன் அலால்
- சிவன்