ஆற்றலம் என்றிரேல் என்மின் - யாம் பகைவர் முன் சென்று போரிட வல்லமையில்லோம் என்று கூறுவீ்ர்களாயின் அதையும் சொல்லுங்கள்; அவர் தோற்று அலம் வந்து உகத் - அப்பகைவர் தோற்று வலி கெட்டு வருந்துதல் அடையுமாறு; யான் தொல் நெடுங்கூற்று அலது உயிர் அது குடிக்கும்- நான் பழைய நெடிய இயமன் அல்லாது பிறர் உயிரைக் குடிக்கும் வலிமை உள்ள; கூர்த்த என் வேல்தலை மானுடர் வெரிநில் உகத்துரந்து - கூர்மையான என் வேலின் நுனி மானிடர் இருவரின் முதுகில் வெளிப்படுமாறு செலுத்திக்; காண்பெனால் - காண்பேன்.
|
அலம் வருதல் - வருந்துதல், உக - வலிமை கெட, தலை - நுனி, வெரிந் - முதுகு, வெரிநில் காண்பெனால் - மார்பில் புதுந்து முதுகு வழி ஊடுருவி வருதல் பற்றி இவ்வாறு கூறினான். ஆற்றலம் - தன்மைப் பன்மை வினை முற்று.
|
(5)
|
7732. | ‘அல்லதும் உண்டு, உமக்கு உரைப்பது: "ஆர் அமர் வெல்லுதும்" என்றிரேல், மேல் செல்வீர்; இனி, வல்லது மடிதலே என்னின், மாறுதிர், சொல்லும், நும் கருத்து’ என முனிந்து சொல்லினான்.
|
அல்லதும் உமக்கு உரைப்பது உண்டு - இவையே அல்லாமல் உமக்கு உரைப்பது வேறு ஒன்றும் உண்டு; ஆர் அமர் வெல்லுதும் என்றிரேல் மேல் செல்வீர் - கொடிய போரில் வெற்றி பெறுவோம் என்றீராயின் (போர்) மேல் செல்லுங்கள்; இனிவல்லது மடிதலே என்னின் - இனி இயல்வது (போரில்) இறத்தலே என்றால்; மாறுதிர் - மீள்வீராக; நும் கருத்து சொல்லும் - நுமது கருத்து யாது எனச் சொல்லுங்கள்; என முனிந்து சொல்லினான் - எனச் சினந்து கூறினான்.
|
வல்லது - இயல்வது, மாறுதிர் - மீள்வீராக.
|
(6)
|
அதிகாயன் தன் வீரத்தை மிகுத்துக் கூறுதல்
|
கலி விருத்தம் (வேறு)
|
7733. | நதி காய் நெடு மானமும் நாணும் உறா, மதி காய் குடை மன்னனை வைது உரையா,
|