பக்கம் எண் :

690யுத்த காண்டம் 

அல்லது,     சக்கரப்படை   தரித்த  திருமால்  அல்லது; எனைவரும்
மருந்தை  மெய் உற   உணரும்   கோள்   இலர்
  -  மற்றுள்ள
எத்தன்மையோரும்  அம்மருந்தை  மெய்மையாக  உணரும்  தன்மையர்
அல்லர்.
 

                                                (87)
 

8790.
 

‘ஆர்கலி கடைந்த நாள், அமிழ்தின் வந்தன;
கார் நிறத்து அண்ணல்தன் நேமி காப்பன;

மேருவின் உத்தரகுருவின்மேல் உள;
யாரும் மற்று உணர்கிலா அரணம் எய்தின;*
 

ஆர்கலி   கடைந்தநாள் அமிழ்தின் வந்தன - (அம்மருந்துகள்)
திருப்பாற் கடலைக் கடைந்த  காலத்தில் அமிழ்தினோடு தோன்றியவை;
கார் நிறத்து  அண்ணல் தன் நேமி காப்பன - மேக வண்ணனாகிய
திருமாலின்  சக்கரப்படையால்  பாதுகாக்கப்படுவன; மேருவின் உத்தர
குருவின்   மேல்  உள
 - மேருவின்  வடபால்  உள்ள  உத்தரகுரு
நாட்டிற்கும்  அப்பால் உள்ளன;  யாரும் மற்று உணர்கிலா அரணம்
எய்தின
 -  யாரும்  நெருங்கி  அறியவியலாத  வண்ணம் பாதுகாவல்
பொருந்தியன.
 

                                                 (88)
 

8791.

‘தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில்;
ஆன்ற பேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல் கேள்;
மூன்று என ஒன்றிய உலகம், முன்னை நாள்,
ஈன்றவன் இறப்பினும், ஆவி ஈயுமால்.
 

தோன்றிய     நாள்முதல் யாரும் தொட்டில் - (அம்மருந்துகள்
பாற்கடலில்)  தோன்றிய  நாள்   முதல்  யாராலும்  தொடப்படாதவை;
ஆன்றபேர்  அண்ணலே! அவற்றின் ஆற்றல்கேள் - விரிந்து புகழை
உடைய   அண்ணலே!   அம்மருந்துகளின்  ஆற்றலைக்  கேட்பாயாக;
மூன்று  என ஒன்றிய உலகம் - மூன்று என்னுமாறு, பாதலம், பூதலம்,
மீதலம்   என  ஒன்றிய  உலகங்களை;  முன்னை  நாள்  ஈன்றவன்
இறப்பினும்  ஆவி  ஈயுமால்
 - பண்டு படைத்த  பிரமன் இறந்தாலும்
அவனுக்கும் உயிரைக் கொடுக்க வல்லவை.
 

                                                 (89)
 

8792.’சல்லியம் அகற்றுவது ஒன்று; சந்துகள்
புல்லுறப் பொருத்துவது ஒன்று; போயின