பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 691

நல் உயிர் நல்குவது ஒன்று; நல் நிறம்
தொல்லையது ஆக்குவது ஒன்று;-தொல்லையோய்!
 

தொல்லையோய்  -  பழமையானவனே!  சல்லியம்  அகற்றுவது
ஒன்று
-  (அம்மருந்துகளுள்)   உடம்பில்   பதிந்துள்ள   அம்புகளை
அகற்றுவது ஒன்று;   சந்துகள்  புல்லுறப்  பொருத்துவது  ஒன்று -
மூட்டுக்கள் பொருந்துமாறு பொருத்துவது ஒன்று;  போயின  நல்லுயிர்
நல்குவது ஒன்று
 -  போன  நல்லுயிரை  மீட்டுக்  கொடுப்பது ஒன்று;
நல்நிறம் தொல்லையது  ஆக்குவது  ஒன்று   -   பழைய   நல்ல
நிறத்தை உண்டாக்குவது ஒன்று.
 

சல்லியம் - அம்பு சந்துகள் - மூட்டுவாய்கள்.
 

                                                 (90)
 

8793.‘வருவது திண்ணம்; நீ வருந்தல்; மாருதி,
தரு நெறி தருமமே காட்ட, தாழ்க்கிலன்;
அருமையது அன்று’ எனா, அடி வணங்கினான்;
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான்.

 

‘வருவது திண்ணம்’ நீ வருந்தல் - ‘மருந்துகள் வருவது உறுதி! நீ
வருந்தாதே; மாருதி  தருநெறி  தருமமே  காட்ட,  தாழ்க்கிலன்  -
அனுமன்,  கொண்டுவரும் வழியினைத்  தருமதேவதையே காட்டக்காலம்
தாழ்க்காமல்    கொண்டுதருவன்;    ‘அருமையது   அன்று’   எனா
அடிவணங்கினான்
 -  அது   அவனுக்கு  அருமையுடையது  அன்று’
என்று சொல்லிச் சாம்பவன்  இராமனடியை  வணங்கினான்; இருமையும்
துடைப்பவன்  ஏம்பல்  எய்தினான்
 -  (தன்னை அடைந்தவர்களின்
இம்மை மறுமைகளை  மாற்றி  வீட்டின்பத்தைத்தருபவனாகிய)  இராமன்
மகிழ்ச்சி அடைந்தான்.
 

                                                 (91)
 

                               அனுமன் மலை கொண்டு வருதல்
 

8794.

‘“பொன்மலைமீது போய், போக பூமியின்
நல் மருந்து உதவும்” என்று உரைத்த நல் உரைக்கு
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்’
என்னலும், விசும்பிடை எழுந்தது, அங்கு ஒலி,
 

“பொன்மலை மீது போய் போக பூமியின் - “பொன் மலையாகிய
மேருவின்  மேற்சென்று  போக பூமிக்கு அப்பால் உள்ள; நல் மருந்து
உதவும்” என்று உரைத்த நல் உரைக்கு
- நல்ல