பக்கம் எண் :

692யுத்த காண்டம் 

மருந்தை     அனுமன்    உதவுவான்”    என்று    நீ    சொன்ன
நல்லசொல்லுக்கு; அன்வயம்  இல்லை   என்று  அயிர்க்கின்றேன்
அலேன்  என்னலும்
 - பொருத்தம்  இல்லை  என்று யான் ஐயுறவு
கொள்ளவில்லை” என்று  இராமன் சொல்லுதலும்; அங்கு விசும்பிடை
ஒலி எழுந்தது
- அங்கே வானிடத்தே பேரொலி எழுந்தது.
 

                                                (92)
 

8795.கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர, கார் வரை
இடை இடை பறிந்து விண் ஏற, இற்று இடை
தடை இலது உடற்றுறு சண்டமாருதம்
வட திசை தோன்றிய மறுக்கம் வந்ததால்.

 

கடல் கிளர்ந்து எழுந்து மேல்படர - கடல் பொங்கி எழுந்து கரை
கடந்து செல்லவும்; கார்வரை இடை இடை பறிந்து விண் ஏற - கரிய
மலைகள்  நடுநடுவே  பறியுண்டு இடையில் முறிந்து  விண்மேல் ஏறவும்;
தடை  இலது  உடற்றுறு  சண்டமாருதம்  -  தங்கு  தடையில்லாமல்
வீசுகின்ற சண்டமாருதம்;  வடதிசை தோன்றிய மறுக்கம் வந்ததால் -
வடதிசையில் தோன்றியதாலாகிய கலக்கம் உண்டாகியது.
 

ஆல் - அசை.
 

                                                  (93)
 

8796.மீன் குலம் குலைந்து உக, வெயிலின் மண்டிலம்
தான் குலைந்து உயர் மதி தழுவ, தன்னுழை
மான் குலம் வெருக் கொள, மயங்கி, மண்டி, வான்,
தேன் குலம் கலங்கிய நறவின், சென்றவால்.
 

மீன்குலம் குலைந்து உக - (அனுமன் வரும் வேகத்தால் உண்டான
பெருங்காற்றால்)   விண்மீன்   கூட்டங்கள்  நிலை  தடுமாறிச் சிந்தவும்;
வெயிலின் மண்டிலம் தான் குலைந்து உயர்மதி தழுவ - வெயிலினை
உடைய    சூரியமண்டலம்    நிலை   கலங்கி   உயர்ந்த  சந்திரனைத்
தழுவவும்;  தன்னுழை   மான்குலம்   வெருக்   கொள  -  அந்தச்
சந்திரனிடத்து  உள்ள  மான்  அச்சங்கொள்ளவும்;  வான் தேன்குலம்
கலங்கிய நறவின் மயங்கி  மண்டி  சென்றவால்
 -  மேகக் கூட்டம்
தேன்கூட்டில்  கலங்கி  எழுந்த தேனீக்கள்  போலக்  கலங்கி நெருங்கிச்
சென்றன.
 

ஆல் - அசை.
 

                                                  (94)