பக்கம் எண் :

694யுத்த காண்டம் 

மந்தரம்    தருதி சென்று’ என - ‘நெருங்கிய ஒளியையுடைய மந்தர
மலையைப் போய்க் கொணர்க’ என்று சொல்ல; ‘வெறிது, கொல்’ எனக்
கொடு  விசும்பின்  மீச்செலும்
 -  ‘உள்ளீடு  இல்லாததொரு  எளிய
பொருளோ’   எனக்    (கண்டோர்)   கருதுமாறு  (முயற்சி  ஏதுமின்றி
விளையாட்டாக)      எடுத்துக்      கொண்டு    விண்மீது    சென்ற;
உறுவலிக்கலுழனே ஒத்துத் தோன்றினான் - மிக்க வலிமையையுடைய
கருடனையே போன்று (அனுமன்) தோன்றினான்.
 

                                                  (97)
 

8800.பூதலத்து, அரவொடு மலைந்து போன நாள்,
ஓதிய வென்றியன், உடற்றும் ஊற்றத்தன்,
ஏதம் இல் இலங்கை அம் கிரிகொடு எய்திய
தாதையும் ஒத்தனன், உவமை தற்கு இலான்.*
 

பூதலத்து, அரவொடு மலைந்து போனநாள் - பூவுலகின் கண்ணே
ஆதிசேடனுடன்  போர்  செய்து  சென்ற  காலத்து; ஓதியவென்றியன்,
உடற்றும்   ஊற்றத்தன்
  -   சிறப்பித்துக்   கூறப்படும்  வெற்றியை
உடையவனும்,  போர்  செய்யும்    வலிமையுடையவனுமாகி;  ஏதம்இல்
இலங்கை அம்கிரி  கொடு  எய்திய
 -  குற்றமில்லாத  இலங்கைக்கு
இடமாக   உள்ளதிரிகூட   மலையைப்  பறித்துக்கொண்டு  தென்திசை
எய்திய;தாதையும்   ஒத்தனன்  தற்கு  உவமை   இலான்  -  தன்
தந்தையாகிய   வாயுதேவனையும்  ஒத்து விளங்கினான்  -  தனக்கு
உவமை இல்லாதவனாகிய அனுமன்.
 

                                                 (98)
 

  ‘வந்தான்’  என்பதற்குள்ளாக, அனுமன் வந்து நிலத்தில் அடி இடுதல்
 

8801.

‘தோன்றினன்’ என்னும் அச் சொல்லின் முன்னம் வந்து
ஊன்றினன், நிலத்து அடி; கடவுள் ஓங்கல்தான்
வான்தனில் நின்றது, வஞ்சர் ஊர் வர
ஏன்றிலது ஆதலின்; அனுமன் எய்தினான்.
 

‘தோன்றினன்’ என்னும்  அச்  சொல்லின்  முன்னம்  வந்து -
(அனுமனது    ஆர்ப்பொலி    கேட்டு)  சாம்பவன்,  அனுமன்  வந்து
தோன்றினான்’  என்று   சொல்லிய  அச்   சொல்லுக்கு முன்பே வந்து;
நிலத்து   அடி   ஊன்றினான்   -  (அனுமன்)  நிலத்தில்  அடியை
ஊன்றினான்; வஞ்சர் ஊர்வர ஏன்றிலது ஆதலின் - வஞ்சக