அரக்கரின்     ஊர்க்கு   வர   இசையவில்லை   ஆதலால்;  கடவுள் ஓங்கல்தான்    வான்தனில்   நின்றது   -   தெயவ்த்தன்மையுள்ள மருத்துமலை  வானில்  தனியே  நின்றுவிட;  அனுமன் எய்தினான் - அனுமன் மட்டும் வந்து நிலத்தை அடைந்தான்.    | 
                                                 (99)    | 
            மருத்துமலையின் காற்றால் யாவரும் உயிர்பெற்று எழுதல்    | 
| 8802. | காற்று வந்து அசைத்தலும்,-கடவுள் நாட்டவர் போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர்- ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார், கூற்றினை வென்று, தம் உருவும் கூடினார்.   | 
காற்று   வந்து அசைத்தலும் - (வானில் நின்ற மருத்து மலையின்) காற்று  வந்து  (தம்  உடம்பின்  மேல்)  வீசுதலும்; கடவுள்  நாட்டவர் போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் - அமரர் நாட்டவர்கள் போற்றுமாறு  அவர்க்கு  விருந்தாய்   மகிழ்ந்து   தங்கியிருந்த  வானர வீரர்களாகிய   புண்ணியவான்கள்;   ஏற்றமும்  பெருவலி  அழகொடு எய்தினார்’ - உயர்வும், மிக்கவலிவும் அழகும் பெற்றவராய்;  கூற்றினை வென்று  தம்  உருவும்  கூடினார்  -  யமனை  வெற்றி கண்டு தமது பழையவானர உருவத்துடன் இயைந்தனர்.    | 
                                                 (100)    | 
| 8803. | அரக்கர்தம் ஆக்கைகள் அழிவு இல் ஆழியில் கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய, கண்டன மரக்குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன; குரக்குஇனம் உய்ந்தது கூற வேண்டுமோ?   | 
அரக்கர் தம் ஆக்கைகள் - அரக்கருடைய உடல்கள்; அழிவுஇல் ஆழியில் கரக்கலுற்று ஒழிந்தன  ஒழிய - அழிலில்லாத ஆழ்கடலில் (மருத்தனால்   எறியப்பட்டு)   மறைந்து    ஒழிந்தனபோக;  கண்டன மரக்குலம் முதலவும்  உய்ந்து  வாழ்ந்தன  -  காணப்பட்டனவாகிய (பட்ட)  மரக்குலம்  முதலிய   ஓருயிர்ப்   பொருள்களும்  உயிர்பெற்று வாழலாயின  என்றால்;குரக்கு  இனம் உய்ந்தது கூற வேண்டுமோ - (ஐயறிவுயிராகிய)   குரங்கினம்   உயிர்    பெற்றது    பற்றிக்  கூறவும் வேண்டுமோ?    | 
                                                 (101)  |