பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 695

அரக்கரின்     ஊர்க்கு   வர   இசையவில்லை   ஆதலால்;  கடவுள்
ஓங்கல்தான்    வான்தனில்   நின்றது
  -   தெயவ்த்தன்மையுள்ள
மருத்துமலை  வானில்  தனியே  நின்றுவிட;  அனுமன் எய்தினான் -
அனுமன் மட்டும் வந்து நிலத்தை அடைந்தான்.
 

                                                 (99)
 

            மருத்துமலையின் காற்றால் யாவரும் உயிர்பெற்று எழுதல்
 

8802.காற்று வந்து அசைத்தலும்,-கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர்-
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார்,
கூற்றினை வென்று, தம் உருவும் கூடினார்.
 

காற்று   வந்து அசைத்தலும் - (வானில் நின்ற மருத்து மலையின்)
காற்று  வந்து  (தம்  உடம்பின்  மேல்)  வீசுதலும்; கடவுள்  நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர்
- அமரர் நாட்டவர்கள்
போற்றுமாறு  அவர்க்கு  விருந்தாய்   மகிழ்ந்து   தங்கியிருந்த  வானர
வீரர்களாகிய   புண்ணியவான்கள்;   ஏற்றமும்  பெருவலி  அழகொடு
எய்தினார்’
- உயர்வும், மிக்கவலிவும் அழகும் பெற்றவராய்;  கூற்றினை
வென்று  தம்  உருவும்  கூடினார்
 -  யமனை  வெற்றி கண்டு தமது
பழையவானர உருவத்துடன் இயைந்தனர்.
 

                                                 (100)
 

8803.அரக்கர்தம் ஆக்கைகள் அழிவு இல் ஆழியில்
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய, கண்டன
மரக்குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன;
குரக்குஇனம் உய்ந்தது கூற வேண்டுமோ?
 

அரக்கர் தம் ஆக்கைகள் - அரக்கருடைய உடல்கள்; அழிவுஇல்
ஆழியில் கரக்கலுற்று ஒழிந்தன  ஒழிய
- அழிலில்லாத ஆழ்கடலில்
(மருத்தனால்   எறியப்பட்டு)   மறைந்து    ஒழிந்தனபோக;  கண்டன
மரக்குலம் முதலவும்  உய்ந்து  வாழ்ந்தன
 -  காணப்பட்டனவாகிய
(பட்ட)  மரக்குலம்  முதலிய   ஓருயிர்ப்   பொருள்களும்  உயிர்பெற்று
வாழலாயின  என்றால்;குரக்கு  இனம் உய்ந்தது கூற வேண்டுமோ -
(ஐயறிவுயிராகிய)   குரங்கினம்   உயிர்    பெற்றது    பற்றிக்  கூறவும்
வேண்டுமோ?
 

                                                 (101)