| 8804. | கழன்றன, நெடுங் கணை; கரந்த புண்; கடுத்து அழன்றில குளிர்ந்தன, அங்கம்; செங் கண்கள் சுழன்றன; உலகு எலாம் தொழுவ; தொங்கலின் குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு கூடினான்.   | 
கழன்றன    நெடுங்கணை கரந்த புண் - உடம்பில் தைத்திருந்த நீண்ட    அம்புகள்தாமே     கழன்று    வீழ்ந்தன;   அவற்றாலாகிய புண்களெல்லாம்   தாமே  மறைந்தன;  கடுத்து  அங்கம்  அழன்றில குளிர்ந்தன   -   வலிமிகுந்திருந்த    அங்கங்கள்  அழற்சி  இன்றிக் குளிர்ந்தன;  செங்கண்கள்  சுழன்றன  -  (கோபத்தால்) சிவந்திருந்த கண்கள் சுழலத் தொடங்கின; உலகு எலாம் தொழுவ - உலகனைத்தும் தொழுவனவாயின; தொங்கலின் குழன்ற  பூங்  குஞ்சியான் உணர்வு கூடினான்  -  மாலை  போன்று  சுருண்ட  அழகிய   மயிர்  முடியை உடைய இலக்குவன் தன் உணர்வு வரப்பெற்றான்.    | 
                                                 (102)    | 
| 8805. | யாவரும் எழுந்தனர்; ஆர்த்த ஏழ் கடல் தாவரும் பேர் ஒலி செவியில் சார்தலும்,- தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செங் கணான் யோகம் நீங்கினன் என,-இளவல் ஓங்கினான்.   | 
யாவரும்     எழுந்தனர்  -  வானரர்  யாவரும்  உயிர்  பெற்று எழுந்தனராய்; ஆர்த்த,  ஏழ்கடல்  தாவரும்  பேர்ஒலி  செவியில் சார்தலும்     -    ஆரவாரித்த    ஏழுகடலின்    ஒலி    போன்ற கெடுதலில்லாதபெரிய   ஆரவாரம்   தன்   செவியில்   சேர்ந்தவுடன்; தேவர்கள்  வாழ்த்தொலிகேட்ட  செங்கணான்  -  தேவர்களுடைய வாழ்த்தொலியைக்    கேட்ட  சிவந்த  கண்களை   உடைய  திருமால்; யோகம்   நீங்கினான்  என  இளவல்   ஓங்கினான்   -   யோக நித்திரையிலிருந்து எழுந்தான் போல இலக்குவன் எழுந்து நின்றான்.    | 
                                                 (103)    | 
                        இராமன் தம்பியைத் தழுவித் துயர் தீர்தல்    | 
| 8806. | ஓங்கிய தம்பியை, உயிர் வந்து உள் உற வீங்கிய தோள்களால் தழுவி, வெந் துயர் நீங்கினன், இராமனும்; உலகில் நின்றில, தீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர். |