உயிர் வந்து  உள்  உற  ஓங்கிய  தம்பியை  -  உயிர்  வந்து உடம்பினுள்  பொருந்தியதினால்   உணர்வு   பெற்ற   எழுந்த  தம்பி இலக்குவனை;  இராமனும் வீங்கிய தோள்களால் தழுவி  வெந்துயர் நீங்கினான் - இராமனும் தன் பூரித்த தோள்களால்  தழுவிக்  கொண்டு கொடிய  துன்பம்  நீங்கப்  பெற்றான்;  உலகில்  உள தீங்கு நின்றில - உலகில் தீங்காக  உள்ளன  எல்லாம்  நில்லாமல் சென்றன; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் - தேவர்களும் கலக்கம் நீங்கினார்கள்.    | 
                                                 (104)    | 
8807.    | அரம்பையர் ஆடினர்; அமிழ்த ஏழ் இசை, நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே நிரம்பின; உலகு எலாம் உவகை நெய் விழா பரம்பின; முனிவரும் வேதம் பாடினார்.    | 
அரம்பையர்     ஆடினர் - அரம்பையர்கள்  ஆடினர்; அமிழ்த ஏழ்இசை நரம்பு இயல் கின்னரம்  முதல  நன்மையே நிரம்பின - அமிழ்தம்     போன்ற     இனிய     ஏழிசையை     யெழுப்புகின்ற நரம்பினாலியன்ற    கின்னர    முதலிய    இசைக்கருவிகளின்   ஒலி (உலகெலாம்) நிரம்பின;உலகு எலாம் உவகை நெய்விழா பரம்பின - உலகெங்கும்   மகிழ்ச்சியால்   செய்யும்   நெய்யாடல்  விழா  பரவின; முனிவரும் வேதம் பாடினார் - முனிவர்களும் வேதம் பாடினார்கள்.    | 
                                                 (105)    | 
8808.  | வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர் போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன; ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின் சீதம் நின்று ஆர்த்தன, தேவர் சிந்தனை.    | 
வேதம்    நின்று  ஆர்த்தன - வேதங்கள் மகிழ்ச்சியோடு நின்று ஆரவாரித்தன; வேத  வேதியர் போதம் நின்று ஆர்த்தன - வேதம் பயின்ற  அந்தணர்  தம்   அறிவு நிலைபெற்று ஆரவாரித்தன; புகழும் ஆர்த்தன;  ஓதம்  நின்று  ஆர்த்தன  -  புகழும்   ஆரவாரித்தன; கடல்கள்  நின்று  ஒலி செய்தன;  ஓத வேலையின் தேவர் சிந்தனை சீதம் நின்று  ஆர்த்தன   -  அலைகளோடு  கூடிய  கடலைப்போல் தேவர்களின் சிந்தனையும் குளிர்ச்சியோடு நின்று ஆரவாரித்தன.    | 
                                                 (106)  |