| விதி காயினும் வீரம் வெலற்கு அரியான் அதிகாயன் எனும் பெயரான் அறைவான்.
|
விதிகாயினும் வீரம் வெலற்கு அரியான் - விதியே சினந்தாலும் வெல்லமுடியாத வீரத்தை உடைய; அதிகாயன் எனும் பெயரான் - அதிகாயன் என்னும்; பெயரை உடையவன்; நதி காய் நெடுமானமும் நாணும் உறா - ஆற்று நீரும் சுடுமாறு பெரிய அவமானத்தால் தோன்றிய கடுஞ்சினமும் நாணமும் அடைந்து. மதி காய் குடை மன்னனை - மதியை வெல்லும் வெண் கொற்றக் குடையை உடைய இராவணனை; வைது உரையா அறைவான் - பழித்துக் கூறிக் கூறத் தொடங்கினான்.
|
விதி - விதிக்கும் கடவுள் பிரமன் என்பர். பிரமன் தலை எழுத்து என்ற வழக்கை உன்னுக. நெடுமானம் - பெரிய அவமானம். ஈண்டு அதனால் தோன்றிய கடுஞ்சினம். உறா - உற்று, செய்யா எனும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம். உரையா - உரைத்து.
|
(7)
|
7734. | ‘வான் அஞ்சுக; வையகம் அஞ்சுக; மா- லான் அஞ்சு முகத்தவன், அஞ்சுக; "மேல் நான் அஞ்சினேன்" என்று, உனை நாணுக; போர் யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ?
|
வான் அஞ்சுக - வானத்தில் உள்ள தேவர்கள அஞசட்டும்; வையகம் அஞ்சுக - மண்ணுலக மாந்தர் அஞ்சட்டும்; மாலான் - திருமாலும்; அஞ்சு முகத்தவன் அஞ்சுக - ஐந்து முகத்தை உடைய சிவபிரானும் அஞ்சுக; மேல் நான் அஞ்சினென் என்று - மேலும் நான் போருக்கு அஞ்சினேன் என்று உன்னைப் பற்றி நீயே நாணப்படுக; போர்யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ - போருக்கு நான் அஞ்சினேன் என்று கூறுவது தகுதியுடையதா?
|
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக - நீ அஞ்சினாய் என்று உன்னுள் நாணம் கொள்க. என்பதாம். எவர் அஞ்சினும் யான் போருக்கு அஞ்சிலேன் என்கிறான். அஞ்சு முகத்தவன் - சிவபிரான்.
|
(8)
|
7735. | வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்- தம்மைத் தளையில் கொடு தந்திலெனோ? உம்மைக் குலையப் பொரும் உம்பரையும் கொம்மைக் குய வட்டணை கொண்டிலெனோ? |