8815. | ‘இன்று வீகலாது, எவரும் எம்மொடு நின்று வாழுமா நெடிது நல்கினாய்; ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது, நீ என்றும் வாழ்தியால் இனிது, என் ஏவலால்!’ |
இன்று வீகலாது எவரும் எம்மோடு - (மேகநாதன் பிரமாத்திரம் ஏவிய) இன்று எவரும் இறவாது எம்மொடு; நெடிது நின்று வாழுமா நல்கினாய் - நெடிது காலம் நின்று வாழுமாறு உயிர் நல்கினாய்; என் ஏவலால் நீ ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது - என் கட்டளையினால் நீ சிறிதும் துன்பநோய் அடையாது; என்றும் இனிது வாழ்தியால் - என்றும் இனிது வாழ்வாயாக. |
  (113) |
8816. | மற்றையோர்களும், அனுமன் வண்மையால், பெற்ற ஆயுளார், பிறந்த காதலார், சுற்றும் மேவினார்; தொழுது வாழ்த்தினார்; உற்றவாறு எலாம் உணரக் கூறினான். |
அனுமன் வண்மையால் பெற்ற ஆயுளார் மற்றையோர்களும் - அனுமனுடைய வள்ளல்தன்மையினால் ஆயுளைப் பெற்றவர்களாகிய மற்றவர்களும்; பிறந்த காதலார் சுற்றும் மேவினார் தொழுது வாழ்த்தினார் - அன்பு மிக்கவர்களாய் அவ்வனுமனைச் சுற்றிக் கொண்டு தொழுது அவனை வாழ்த்தினார்கள்; உற்றவாறு எலாம் உணரக் கூறினான் - அனுமனும் மருத்துமலையைக் கொண்டு வந்த நிகழ்ச்சி எல்லாவற்றையும் அவர்கள் உணருமாறு கூறினான். |
  (114) |
மருத்துலையுடன் அனுமன் மீண்டு போதல் |
8817. | ‘உய்த்த மா மருந்து உதவ, ஒன்னலார், பொய்த்த சிந்தையார், இறுதி பொய்க்குமால்; மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய் வைத்து, மீடியால்-வரம்பு இல் ஆற்றலாய்!’ |
வரம்பு இல் ஆற்றலாய்! - எல்லையற்ற ஆற்றலை உடைய அனுமனே!; உய்த்தமாமருந்து உதவ - நீ கொண்டு வந்த சிறந்த மருந்து உதவுவதால்; பொய்த்த சிந்தையர் ஒன்னலார் இறுதி |