பக்கம் எண் :

704யுத்த காண்டம் 

கண்டான்  -    இளமையான    நல்ல   மயில்   போன்ற   சாயலை
உடையமகளிரை நெடிதாய களியாட்டம் ஆடுமாறு செய்தான்.
 

                                                   (1)
 

8820.அரம்பையர், விஞ்சை மாதர், அரக்கியர், அவுணர் மாதர்,
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர், இயக்கர்
                                      கோது இல்
கரும்பினும் இனிய சொல்லார், சித்தர்தம் கன்னிமார்கள்,
வரம்பு அறு சும்மையோர்கள், மயில்-குலம் மருள, வந்தார்.
 

அரம்பையர், விஞ்சை  மாதர் அரக்கியர்  அவுணர்  மாதர் -
தேவமாதரும்,  வித்யாதரமகளிரும்,  அரக்கியரும்,  அசுரப் பெண்டிரும;
குரும்பை அம் கொங்கை நாகர்கோதையர்,  இயக்கர்  - குரும்பை
போன்ற   அழகிய    தனங்களை  உடைய  நாககன்னியரும்,  இயக்க
மகளிரும்;கோது இல்  கரும்பினும்  இனிய  சொல்லார், சித்தர்தம்
கன்னிமார்கள்
  -   கோது   நீக்கிய  கரும்பினும்இனிய  சொல்லை
உடையவர்களாகிய   சித்தர்   பெண்களும்   ஆகிய;  வரம்பு  அறு
சும்மையோர்கள்  மயில்  குலம்  மருள வந்தார்
 -  எல்லையற்ற
கூட்டத்தினர் மயிற்குழாங்களும் மருட்சியுறுமாறு வந்தார்கள்.
 

குரும்பை   - மகளிர்தனத்திற்குவமை, "குவவின கொங்கை குரும்பை
(திருக்கோவை  -  108)   கோது  இல்   கரும்பு  -  கோது  - சக்கை.
"கரும்பூர்ந்த  சாறுபோற்  சாலவும்  பின்னுதவி,  மற்றதன் கோது போற்
போகும் உடம்பு" (நாலடி - 34) கரும்பினும்  இனிய  சொல்லார்; "கன்னி
நடக்கும்  நடை  கற்றாள்  கரும்பு  கசக்கும்  மொழி  பெற்றாள்" (பிரபு
-உற்பத்தி - 57)
 

                                                   (2)
 

8821.மேனகை, விசய வாட்கண் திலோத்தமை, அரம்பை,
                                       மெல்லென்
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி, முதலாம் தெய்வ
வானக மகளிர் வந்தார்-சில் அரிச் சதங்கை பம்ப,
ஆனகம், முரசம், சங்கம், முருட்டொடும் இரட்ட, ஆடி.