பக்கம் எண் :

 களியாட்டுப் படலம் 705

மேனகை  விசய வாட்கண் திலோத்தமை அரம்பை - மேனகை,
வெற்றி  பெற்ற  வாளைப்   போன்ற  கண்ணையுடைய  திலோத்தமை,
அரம்பை; மெல்லென் தேன் நகு  மழலை  இன்சொல் உருப்பசி -
மென்மையாக    ஒலிக்கின்ற,   தேனையும்  பழித்துச்  சிரிப்பதற்குரிய,
மழலையாகிய  இனிய சொல்லினை உடைய ஊர்வசி; முதலாம் வானக
தெய்வமகளிர்
  -  முதலாயவானுலகத்துத்  தெய்வமகளிர்;  ஆனகம்,
முரசம், சங்கம், முருட்டொடும் இரட்ட
- படகமும் முரசமும் சங்கும்
முருடு  என்னும் வாத்தியத்தோடு முழங்க; சில் அரிச் சதங்கை பம்ப
ஆடி வந்தார்
 -  தம்  காலில்  அணிந்த சிலவாகிய பரலை உடைய
சதங்கைகள் ஒலிக்க ஆடிக்கொண்டே வந்தார்கள்.
 

ஆனகம்     - படகம்; ஒரு வகை வாத்தியம். முருடு - மத்தளம்.
“முரசியம்பின்   முருடதிர்ந்தன”  (சிலம்-1-46)  என்றவிடத்து  முருடு
மத்தளமெனும் குறிப்புரை காண்க.
 

                                                  (3)
 

8822.

தோடு உண்ட சுருளும், தூங்கும் குழைகளும், சுருனின்
                                     தோய்ந்த
ஏடு உண்ட பசும் பொன் பூவும், திலதமும், இலவச்
                                    செவ் வாய்
மூடுண்ட முறுவல் முத்தும், முள்ளுண்ட முளரிச்
                                     செங்கண்,
காடு உண்டு புகுந்தது என்ன, முனிந்தது-கறை
                                வெண் திங்கள்.
 

தோடு  உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் - பனந்தோட்டின்
தன்மை   பொருந்தியகாதணியாகிய    பொற்சுருளும்,   தொங்குகின்ற
குழைகளும்; சுருளின் தோய்ந்த  ஏடுஉண்ட  பசும்  பொன் பூவும்
திலகமும்
 -  (ஐம்பாலில்  ஒன்றாகிய)  சுருள்  என்ற   முடிவகையில்
அமைந்த இதழ் பொருந்திய பசும் பொன்னாலியன்ற   பூவும், திலகமும்;
இலவச் செவ்வாய் மூடுண்ட முறுவல் முத்தும் - இலவம் பூப்போன்ற
சிவந்த வாயால் மூடுண்டு  கிடக்கின்ற பற்களாகிய முத்தும்; முள்ளுண்ட
முளரிச்  செங்கண்   காடுஉண்டு    புகுந்தது   என்ன
- முட்கள்
பொருந்திய    செந்தாமரை   மலர்      போன்ற    சிவந்தகண்ணும்
ஆகியவற்றைக்   கொண்ட (தனக்குப் பகையான  முளரிக்காடு  தன்னை
மறைக்கும்   வண்ணம்)  காடு   புகுந்துள்ளது   என்ற   காரணத்தால;
கறைவெண்திங்கள் முனிந்தது - களங்கத்துடன் கூடய வெண்ணிறமான
சந்திரன் வெகுண்டது.