பொருந்தி; முன்பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றி - முற்காலத்து அந்நெறியின் பயனை உணர்ந்த தூயோர்தம் உபதேச மொழியோடு பழகி முதிர்ச்சியுற்று; பின்பயன் உணர்தல் தேற்றாப் போதைபால் வஞ்சன் செய்த - பின்னால் அந்த உபதேச மொழியினால் உளதாம்பயனை (உணரவேண்டி இருக்க, அதனை) உணர்தல் இல்லாத பேதைபால் வஞ்சகன் ஒருவன் செய்த; கற்பனை என்ன ஓடிக் கலந்தது கள்ளின் வேகம் - கற்பனை, அப்பேதையின் உள்ளத்தில் விரைந்த நம்பப்பட்டு பரவுவது போலக் கள்ளின் வேகம் மகளிர் கூட்டத்தில் விரைந்து பரவியது. |
நூலறிவோடு கேள்வி ஞானமும் எய்தி அதன் பயனை உணராதாசைப் பேதை என்றார். "ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையாரில்" (குறள்-834) என்பது காண்க. |
  (6) |
8825. | பல பட முறுவல் வந்து பரந்தன; பனித்த, மெய் வேர்; இலவு இதழ் துடித்த; முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற; கொலை பயில் நயன வேல்கள் கொழுங் கடை சிவந்த; கொற்றச் சிலை நிகர் புருவம் நெற்றிக் குனித்தன; விளர்த்த செவ் வாய். |
பலபட முறுவல் வந்து பரந்தன மெய்வேர் பனித்த - (கள்ளருந்திய மகளிர்க்கு) பல வகையாகச் சிரிப்பு வந்து பரவின. உடம்பில் வேர்வைத் துளிகள் தோன்றின; இலவு இதழ்துடித்த; முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற - இலவமலர் போன்று சிவந்த உதடுதுடத்தன; முல்லை அரும்பு போன்ற பற்கள் வெள்ளிய நிலவைச் சொரிந்தன; கொலைபயில் நயன வேல்கள் கொழுங்கடை சிவந்த - (ஆடவரை) வருத்துதலில் பழகிய கண்களாகிய வேற்படையின் செழுமையான ஓரங்கள் சிவந்தன; கொள்ளச் சிலைநிகர் புருவம் நெற்றிக்குனித்தன செவ்வாய்விளர்த்த - வெற்றி பொருந்திய வில்லை நிகழ்த்த புருவங்கள் நெற்றியின் மீது வளைந்தன; சிவந்தவாய் வெண்ணிறம் பெற்றன. |
  (7) |
8826. | கூந்தல் அம் பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல் ஏந்து அகல்அல்குல் தேரை இகந்துபோய் இறங்க, யாணர்ப் |