பக்கம் எண் :

708யுத்த காண்டம் 

பூந் துகிலோடும் பூசல் மேகலை, சிலம்பு பூண்ட
மாந் தளிர் எய்த, நொய்தின் மயங்கினர்-மழலைச்
                                       சொல்லார்.
 

கூந்தல்  அம்பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல் -
கூந்தலாகிய  -  அழகிய  சுமையான  திரண்ட  சுருள்  தன்மையுடைய
அழகு  செய்யப்பட்ட  மேகம்; ஏந்து  அகல் அல்குல்தேரை இகந்து
போய்  இறங்க
 - பக்கம் உயர்ந்த விரிந்த அல்குல் ஆகிய தேரையும்
கடந்து  கீழ் இறங்கவும்; யாணர்ப் பூந்துகிலோடும் பூசல் மேகலை -
புதிய  பூந்துகிலோடு,  ஆரவாரிக்கும்   மேகலையும் (கழன்று); சிலம்பு
பூண்ட மாந்தளிர்  எய்த   மழலைச்   சொல்லார்    நொய்தின்
மயங்கினர்
- சிலம்பு பூண்டுள்ள   மாந்தளிர்   போன்ற    பாதத்தை
அடையவும் மழலை   மொழியினை   உடைய    மகளிர்   விரைவில்
மயங்கினார்கள்.
 

                                                  (8)
 

8827.கோத்த மேகலையினோடும் துகில் மணிக் குறங்கைக் கூட,
காத்தன, கூந்தற் கற்றை, அற்றம், அத் தன்மை கண்டு-
வேத்தவை, ‘கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார்;
                                        மேலோர்
சீர்த்தவர் செய்யத் தக்க கருமமே செய்தார்’ என்ன.
 

வேத்தவை   - வேந்தனாகிய இராவணனின் அவையில் உள்ளோர்;
‘கீழ்  உளோர்கள் கீழ்மையே  விளைத்தார்  -  கீழ்  உள்ளவர்கள்
கீழ்மையே செய்தார்கள்; மேலோர் சீர்த்தவர் செய்யத்தக்க கருமமே
செய்தார்   என்ன
  -   மேலுள்ளவர்கள்   சிறந்தவர்  செய்யத்தக்க
நற்செயலையே    செய்தார்கள்   என்று   புகழுமாறு;   மணிகோத்த
மேகலையினோடும் துகில் குறங்கைக்  கூட
- மணிகள் கோத்துள்ள
மேகலையினோடு    இடையில்   அணிந்துள்ள    துகில்   அவிழ்ந்து
அற்றங்காட்டித்  துடையை  அடைய;  அத்தன்மை  கண்டு  கூந்தற்
கற்றை  அற்றம் காத்தன
 -  அத்தன்மை  கண்டு (தலை மேலுள்ள)
கூந்தல்  திரள்  அவிழ்ந்து  வீழ்ந்து  அவர்  அற்றத்தை  மறைத்துக்
காத்தன.
 

மேற்பாடலின்  விளக்கமாக  இப்பாடல்   அமைகின்றது.   "அற்றம்
மறைக்கும் பெருமை சிறுமை தான் குற்றமே கூறிவிடும்" (குறள்-980)