பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 71

வெம்மைப்   பொருதானவர் மேல் வலியோர் - கொடுமையாகப்
போர்   செய்கின்ற   தானவரை  விட  வலிமையுடையவர்;  தம்மைத்
தளையில்  கொடு தந்திலனோ
 -  தம்மைத்  தளையிட்டுப் பிணித்து
வந்து  (உன்னிடம்)  கொடுத்திலனோ?  உம்மைக்  குலையப் பொரும்
உம்பரையும்
  -   உம்மையும்  நடுங்குமாறு  போர்  செய்யும்  (வலி
படைத்த)  தேவர்களையும்;  கொம்மைக்குய வட்டணை - திரட்சியான
வாளால்  இடம்  வலமாகச்  சாரிதிரிந்து;  கொண்டிலனோ  - பொருது
வெற்றி கொண்டிலனோ.
 

கொம்மை     - திரட்சி. குயம் - வாள், மார்பும் ஆம். வட்டணை
கொள்ளுதல்  -  இடம்  வலமாகச்  சாரிதிரிந்து வெற்றி கொள்ளுதல்,
சுழல   அடித்தலும்   ஆம்.  குயவட்டணை  கொள்ளல்  என்பதற்கு
மார்பில் தாளம் போட்டிலனோ என உரைப்பாரும் உளர்.
 

                                                   (9)
 

7736.‘காய்ப்புண்ட நெடும் படை கை உளதாத்
தேய்ப்புண்டவனும், சில சில் கணையால்
ஆய்ப்புண்டவனும், அவர் சொல் வலதால்
ஏய்ப்புண்டவனும், என எண்ணினையோ?
 

காய்ப்புண்ட  நெடும் படைகை உளதாத் - காய்ச்சிக் கூர்மையாக
அடிக்கப்  பெற்ற  நெடிய  படைக்கலங்கள்  தன்  கையில் உள்ளதாக;
தேய்ப்புண்டவனும்    -    தரையில்    தேய்க்கப்  பட்டு   இறந்த
அக்ககுமாரனும்;  சில  சில்  கணையால் ஆய்ப்புண்டவனும்  - சில
வலியற்ற  அம்புகளால்  உயிரொடுங்கியவனான கும்பகருணனும்; அவர்
சொல் வலதால்  ஏய்ப்புண்டவனும்
 -  இராம  இலக்குவரது புகழின்
வல்லமையால் ஏய்க்கப்பட்டவனான வீடணனும்; என எண்ணினையோ
- என்று (என்னை) எண்ணினாயோ.
 

தேய்ப்புண்டவன்     -  அனுமனால்  தரையில்  தேய்க்கப்பட்டு
உயிரொடுங்கிய   அக்ககுமாரன்.   இச்செயல்   சுந்தர  காண்டத்தில்
அக்ககுமாரன்    வதைப்    படலத்தில்    (படலம்   10)   கண்டது.
ஆய்ப்புண்டவன்     -     உயிரொடுங்கியவனான    கும்பகருணன்.
சொல்வலதால்  - புகழின் வல்லமையால் வலத்தால் வலதால் என்பது.
ஏய்ப்புண்டவன் - ஏய்க்கப்பட்டவனான வீடணன்.
 

                                                   (10)
 

                   அதிகாயன் வஞ்சினம் கூறி, போருக்குச் செல்லல்
 

7737.

‘உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து, அவனைக்