வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் - புல்லாங்குழல் வழங்கும் இன்னிசை தன்னிடம் விளங்குகின்ற மழலைச் சொல்லைப் பேசும் வாயினை உடைய மகளி்ர்; மயக்கம் வீங்க - மயக்கம் ஏற்பட்டதனால்; சங்கையில் பெரும்பாண் உற்ற நிறத்துறை நிரம்பித்தள்ள - குற்றமற்ற பெரும் பாணர்கள் கண்டறிந்த விளக்கமானதுறை மிக்கு மாறுபட்டுப்போக; சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன - சுவை குன்றாத இனிய அமிழ்தத்தோடு புளிப்புச் சுவை விரவிய கள்ளினைக் கலந்தாற்போல; வெங்குரல் எடுத்தபாடல் விளித்தனர் - கடுங்குரல் எடுத்துப்பாடும் பாடலைப் பாடினர். |
  (11) |
8830. | ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன,- தான் அவை உருவில் தோன்றும் பாவனைத் தகைமை சான்றோர்,- மான் அவர் நோக்கினாரை மைந்தரைக் காட்டி, வாயால் ஆனையை விளம்பி, தேரை அபிநயத்து இயற்றி உற்றார். |
கண்டார்க்கு இந்திர சாலம் என்ன - (தம் அபிநயத்தைக்) கண்டோர்க்கு இந்திர சாலவித்தை போலத்தோன்றும்படி; ஏனைய பிறவும் தான் அவை உருவில் தோன்றும் - தாமல்லாத பிற உயிர்களாகிய அவையும் தம் உருவில் தோன்றுமாறு; பாவனைத் தன்மை சான்றோர் - நடிக்கும் பாவனைத் தன்மை மிக்கோராகிய நாடக மகளி்ர்; மான் அமர் நோக்கினாரை மைந்தரைக்காட்டி - மான் போன்ற கண்ணினை உடைய பெண்டிரையும ஆடவரையுங் காட்டி, (சைகையால் அவர்களைப் போல் அபிநயிக்கப் போவதாகக் குறித்து); வாயால் ஆனையை விளம்பி தேரை அபிநயித்து இயற்றி உற்றார் - (அதைமறந்து) வாயினால் ஆனையைக் காட்டப் போவதாகக் கூறிவிட்டு (அதையும் மறந்து) அபிநயிக்கும்போது தேரை அபிநயித்துக் காட்டினார்கள். |
  (12) |
8831. | அழுகுவர்; நகுவர்; பாடி ஆடுவர்; அயல் நின்றாரைத் தொழுகுவர்; துயில்வர்; துள்ளித் தூங்குவர்; துவர் வாய் இன் தேன் |