| ஒழுகுவர்; ஒல்கி ஒல்கி, ஒருவர்மேல் ஒருவர் புக்கு, முழுகுவர், குருதி வாட் கண் முகிழ்த்து, இடை, மூரி போவர். | அழுகுவர்; நகுவர்; பாடி ஆடுவர்; - (கள்ளுண்டமயக்கத்தால்) அழுவார்கள்; பின்பு உடனே சிரிப்பார்கள்; பின்பு விரும்பியாங்கு பாடிக்கொண்டு ஆடுவார்கள்; அயல் நின்றாரைத் தொழுகுவர் துயில்வர்; துள்ளித்தூங்குவர் - பின்பு அருகில் நின்றவர்களைக் கை கூப்பித் தொழுவார்கள்; உடனே உறங்குவார்கள்; உடனே துள்ளி எழுந்து சோர்வார்கள்; துவர்வாய் இன்தேன் ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர் மேல் ஒருவர்புக்கு முழுகுவர் - சிவந்தவாயில் உள்ள இனிய தேன் போன்ற உமிழ்நீரை ஒழுகவிடுவர், உடனே தளர்ந்து தளர்ந்து ஒருவர்மேல் ஒருவர்புகுந்து படிவார்கள்; குருதி வாட்கண் முகிழ்த்து, இடை, மூரிபோவர் - இரத்தம் போன்று சிவந்த ஒளி வாய்ந்த கண்ணை மூடிக்கொண்டு நெட்டை முரிப்பார்கள். |   (13) | 8832. | உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார், ‘உள்ளத்து உள்ளது அயிர்ப்பினில் அறிதிர்’ என்றே; அது களியாட்டம் ஆக, செயிர்ப்பு அறு தெய்வச் சிந்தைத் திரு மறை முனிவர்க்கேயும், மயிர்ப்புறம்தோறும் வந்து பொடித்தது, காம வாரி. | ‘உள்ளத்து உள்ளது அயிர்ப்பினில் அறிதிர்’ என்றே - ‘எம் உள்ளத்தி்ல் உள்ள கருத்து (புணர்ச்சி விருப்பமே என்பது) தெளிவாகவே தெரிந்து கொள்ளுங்கள்’ என்று; உயிர்ப்புறத்து உற்றதன்மை உணர்த்தினார்கள் - தம் உடம்பில் பொருந்திய செய்கையால் அப்பெண்கள் உணர்த்தினார்கள்; அது களியாட்டம் ஆக - அக்குறிப்பு களியாட்டமாக வெளிப்பட; செயிர்ப்பு அறு தெய்வச் சிந்தைத் திருமறை முனிவர்க்கேயும் - காமவெகுளி மயக்கங்களின் நீங்கிய சிந்தையரான தெய்வத் தன்மை பொருந்திய சிறந்த வேதமுணர்ந்த முனிவர்க்கும்; மயிர்ப்புறம் தோறும் வந்து காம வாரி பொடித்தது - மயிர்க்கால் தோறும் காம உணர்ச்சியாகிய வெள்ளம் தோன்றியது. |   (14) |
|
|
|