அசைகின்ற பொன் சரட்டையும், மேகலையையும், புடவையையும்; வாங்கி, புயல்வரு கூந்தல் பாரக் கற்றையின் புனையலுற்றார் - கையில் வாங்கி மேகம் போன்ற கூந்தலாகிய கனமுடைய கற்றையில் அணியத் தொடங்கினார்கள். | (16) | வானரர் ஆர்ப்பொலியும் அதன் விளைவும் | 8835. | முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல் நல்லார், இத் தன்மை எய்த நோக்கி, அரசு வீற்றிருந்த எல்லை, அத் தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை மத்தன் மெய் மயங்க வந்து, செவிதொறும் மடுத்தது அன்றே. | முத்து அன்மை மொழியில் ஆகா முகிழ் இளமுறுவல் நல்லார் - முத்து அல்ல எனக்கூறமுடியாத (முத்துக்களே எனத்தகும்) பற்கள் தோன்ற முகிழ்க்கின்ற புன்முறுவலையுடைய பெண்கள்; இத்தன்மை எய்த நோக்கி அரசு வீ்ற்றிருந்த எல்லை - கள் மயக்கத்தால் இத்தன்மை அடைதலை விருப்பத்தோடு நோக்கிக் கொண்டு (இராவணன்) அரசு வீற்றிருந்தபோது; அத்தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை - அங்ஙனம் (அனுமான் கொணர்ந்த மருந்தால்) உயிர் பெற்றெழுந்த வானரசேனையாகிய கடல் ஆரவாரித்த ஓசை;மத்தன் மெய்மயங்க வந்து செவிதொறும் மடுத்தது - காமமயக்கம் கொண்ட அவ்விராவணன் உடல் தளருமாறு வந்து அவன் செவிகள் தோறும் நுழைந்தன. | அன்று, ஏ - அசைகள். | (17) | 8836. | ஆடலும், களியின் வந்த அமலையும், அமிழ்தின் ஆன்ற பாடலும், முழவின் தெய்வப் பாணியும், பவள வாயார் ஊடலும், கடைக்கண் நோக்கும், மழலை வெவ் உரையும், எல்லாம் வாடல் மென் மலரே ஒத்த-ஆர்ப்பு ஒலி வருதலோடும். |
|
|
|