நிலையும்" (தொல்-பொருள். புறத்12) இதற்கு, "குதிரையானன்றித் தேர்தானே செல்லாமையின் தேர்க்கு மறம் இன்றென்று அது கூறாராயினர்" என்ற நச்சினார்க்கினியர் குறிப்பும் இங்கு காணத்தகும். | (19) | 8838. | முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர், முழுக் கண் வேலால் குத்துவார், கூட்டம் எல்லாம் வானரக் குழுவின் தோன்ற, மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற, வதனம் என்னும் பத்து வாள் மதிக்கும், அந் நாள், பகல் ஒத்தது இரவும், பைய. | முழுக்கண் வேலால் குத்துவார் - இலக்கணம் முழுமையும் பெற்ற வேற்படைபோன்ற கண்களால் குத்துகின்றவர்களாகிய; முத்துவாள் முறுவல் மூரல் முகத்தியர் கூட்டம் எல்லாம் - முத்துக்களைப் போன்ற பற்களைக் காட்டி ஒளி பொருந்திய சிரிப்பினைச் சிந்துகின்ற நகைமுகத்தினை உடைய களியாட்டு மகளிர் கூட்டமெல்லாம்; வானரக்குழுவின் தோன்ற - இப்போதுவானரக்கூட்டம் போல (வெறுக்கத்தக்கனவாகத்) தோன்றவும்; மத்துவார்கடலின் உள்ளம் மறுகுற - மந்தரமலையாகிய மத்தாற் கடையப் பெற்ற கடலைப்போல உள்ளம் கலங்கவும்; வதனம் என்னும் பத்துவாள் மதிக்கும் - இராவணனது முகம் என்கின்ற பத்து ஒளி வாய்ந்த மதிகளுக்கும் அந்நாள் பகல் ஒத்தது இரவும் பைய - அந்நாள் இரவு (பொலிவழியச் செய்த) பண்பினால் பகலை ஒத்தது. | (20) | 8839. | ஈது இடை ஆக, வந்தார், அலங்கல்மீது ஏறினார்போய் ஊதினார், வேய்கள், வண்டின் உருவினார், உற்ற எல்லாம்; ‘தீதுஇலர், பகைஞர்’ என்ன, திட்கென்ற மனத்தன், தெய்வப் போது உகு பந்தர்நின்று, மந்திரத்து இருக்கை புக்கான். |
|
|
|