ஈது இடைஆக வேய்கள் வண்டின் உருவினார் வந்தார் - இந்நிகழ்ச்சிக்கு இடையே ஒற்றர்கள் வண்டின் உருவம் உடையவராய் வந்து;அலங்கல் மீது ஏறினார்போய் உற்ற எல்லாம் ஊதினார் - இராவணன் மாலைமீது ஏறிப் போய்ப் போராட்டத்தில் நிகழ்ந்த எல்லாவற்றையும் (அவன் செவியில்) கூறியவர்களாய்; ‘பகைஞர் தீது இலர்’ என்ன திட்கென்ற மனத்தன் - ‘பகைவர்கள் மரணமென்னும் தீது இலராயினர்’ என்று கூற ‘திக்’கென்ற மனத்தனாகிய இராவணன்; தெய்வப்போது உகுபந்தர் நின்று மந்திரத்து இருக்கை புக்கான் - கற்பகம் முதலிய தெய்வமலர்கள் சிந்துகின்ற பந்தலில் இரந்து ஆலோசனைக்குரிய மண்டபத்தில் புகுந்தான். |