மந்திரர் எவரும் வந்து, மருங்கு உறப்படர்ந்தார் - ஏற்றுக் கொள்ளத்தக்க ஆலோசனையாளர் எவரும், மற்றவர்களும் வந்து தன் பக்கத்தில் நெருங்கிச் சேர்ந்தார்கள்; பட்ட அந்தரம் முழுதும் அனையவர்க்கு தானே அறியச் சொன்னான் - (அப்போதுதான்) பட்ட துன்பம் யாவற்றையும் அச்சபைக்கு வந்திருந்த அனைவருக்கும் தானே தெளிவாக எடுத்துச் சொன்னான். (இராவணன்). | (1) | மாலியவான் அறிவுரை | 8841. | ‘நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட, நணுகும் அன்றே, வெங் கொடுந் தீமைதன்னால் வேலையில் இட்டிலேமேல்? இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை, பங்கயத்து அண்ணல் மீளாப் படை பழுதுற்ற பண்பால். | வெங்கொடும் தீமை தன்னால் வேலையில் இட்டிலேமேல் - (அதுகேட்ட மாலியவான் இராவணனை நோக்கி) மிகக் கொடிய தீய எண்ணத்தால் கடலில் கொண்டு போய் போடாமல் இருந்திருந்தால்; நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே? - அழிந்து போன நம் சேனை முழுதுங் கூட உயிர் பெற்றெழ வாய்ப்பிருந்திருக்கும் அல்லவோ? பங்கயத்து அண்ணல் மீளாப் படை பழுதுற்ற பண்பால் - தாமரைமலரில் வீற்றிருப்பவனாகிய பிரமதேவனின் மீட்கமுடியாத படையாகிய பிரமாத்திரமும் வீணான தன்மையால்; இனி இங்கு உள எல்லாம் மாள்தற்கு வரும் இடையூறு இல்லை - இனிமேல் இங்குள்ள யாவும் இறப்பதைத் தடுக்கவரும் இடையூறு கிடையாது. | இதுமுதல் ஏழு பாடல்களில்அறிவுரை கூறுகிறான் என்பதனைப் பின்வரும் 8847 ஆம் பாடல் கொண்டு அறிக. | (2) | 8842. | ‘இலங்கையின்நின்று, மேரு பிற்பட, இமைப்பில் பாய்ந்து, வலம் கிளர் மருந்து, நின்ற மலையொடும், கொணர வல்லான் |
|
|
|