பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 719

    

அலங்கல் அம் தடந் தோள் அண்ணல் அனுமனே ஆதல்
                                       வேண்டும்-
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால்.
 

கண்ட     ஆற்றால்  -  (நாம்  நூல்களால்)  கண்ட  நெறியால்
(பார்க்கும்போது); இலங்கையின்  நின்று மேரு  பிற்பட இமைப்பில்
பாய்ந்து
    -     இலங்கையினின்றும்    மேருமலையும்    பிற்பட
இமைப்பொழுதில்   பாய்ந்து  சென்று;  வலம்கிளர்  மருந்து  நின்ற
மலையொடும்  கொணர வல்லான்
 - வலிமை விளங்கும் மருந்தினை
அது    நின்ற   மலையோடும்    கொணரவல்லவனாகிய;   அலங்கல்
அம்தடந்தோள்  அண்ணல் அனுமனே
 -  மாலையணிந்த  அழகிய
பெரிய   தோளினையுடைய  பெருமை  மிக்க  அனுமனே;   உலகுக்கு
எல்லாம் கலங்கலில் காரணம் ஆதல் வேண்டும்
- உலகுக்கெல்லாம்
கலங்குதல் இல்லாத காரணப் பொருளாகிய கடவுள் ஆதல் வேண்டும்.
 

                                                 (6)
 

8843.‘நீரினைக் கடக்க வாங்கி, இலங்கையாய் நின்ற குன்றைப்
பாரினில் கிழிய வீசின், ஆர் உளர், பிழைக்கற்பாலார்?
போர் இனிப் பொருவது எங்கே? போயின அனுமன்,
                                     பொன் மா
மேருவைக் கொணர்ந்து, இவ் ஊர்மேல் விடும் எனின்,
                               விலக்கல் ஆமோ?
 

இலங்கையாய் நின்ற குன்றை   நீரினைக்   கடக்க  வாங்கி -
இலங்கை நகராக   நின்றுள்ள குன்றினை,  அதனைச் சூழ்ந்துள்ள கடல்
நீரினைக் கடக்குமாறு பறித்து    எடுத்து;  பாரினில்  கிழிய   வீசின்
பிழைக்கற் பாலார்,  ஆர்  உளர்?
 -  பூமியின்  மேல்  கிழியுமாறு
எறிவானாயின்,   உயிர்  பிழைத்தற்குரியோர்   இங்கு    யார்  உளர்?
போர்  இனிப்பொருவது எங்கே?  போயின  அனுமன் - (அனுமன்
அங்ஙனம் செய்தால்) இனிய போர் செய்வது எங்கே?  மருத்துமலையை
வைத்துவிட்டு  வரப் போயுள்ள  அனுமன்;   பொன்மா   மேருவைக்
கொணர்ந்து   இவ்   ஊர்மேல்    விடும்    எனின்  விலக்கல்
ஆமோ?
 -  பொன்மயமான மேருமலையைக்