| கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல், நம்பிக்கு ஒரு நன் மகனோ, இனி நான்?
|
உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் - உன் தம்பியின் உயிருக்கு இறுதி செய்தவனான; ஒருவன் தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து - ஒருவனாகிய (இராமனின்) தம்பியின் உயிருக்கு அழிவு செய்து; அவனைக் கம்பிப்பது ஓர் வன்துயர் கண்டிலனேல் - அவனுக்கு நடுக்கம் தரும் ஒப்பற்ற துன்பத்தைச் செய்யாமல் போவேன் ஆயின்; இனி நான் நம்பிக்கு ஒரு நன்மகனோ - இனி நான் ஆடவரிற் சிறந்த உனக்கு ஒப்பற்ற நல்ல மகனாவேனோ?
|
கம்பித்தல் - நடுங்குதல். நம்பிக்கு - முன்னிலையில் படர்க்கை வந்த வழுவமைதி.
|
"இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் துன்னரும் துப்பின் வஞ்சினத்தானும்"
|
(தொல் - புறத்) என்றபடி அதிகாயனின் இக்கூற்று வஞ்சினக் காஞ்சி என்ற புறத்துறையின் பாற்படும்.
|
(11)
|
7738. | ‘கிட்டிப் பொருது, அக் கிளர் சேனை எலாம் மட்டித்து, உயர் வானரர் வன் தலையை வெட்டித் தரை இட்டு, இரு வில்லினரைக் கட்டித் தருவென்; இது காணுதியால்.
|
கிட்டிப் பொருது - நெருங்கிப் போர் செய்து; அக்கிளர் சேனை எலாம் மட்டித்து - அந்த (கும்பகருணன் மரணத்தால்) கிளர்ச்சி கொண்டுள்ள குரங்குப் படையை எல்லாம் அழித்து; உயர் வானரர் வன் தலையை வெட்டித் தரை இட்டு - சிறந்த வானரத் தலைவர்களின் வலிய தலைகளை எல்லாம் வெட்டித் தரையில் போட்டு; இரு வில்லினரைக் கட்டித் தருவென் - இரு வில்லேந்திகளான இராம லக்குவரைக் கட்டிக்கொண்டு வந்து தருவேன்; இது காணுதியால் - இது நடைபெறப் போகிற செயல் இதனை நீ காண்பாயாக.
|
மட்டித்தல் - அழித்தல். பிசைதல் எனினுமாம். ஆல் - அசை. காணுதி - முன்னிலை ஒருமை வினைமுற்று.
|
(12)
|
7739. | ‘"சேனைக் கடலோடு இடை செல்க" எனினும், யான் இப்பொழுதே, "தனி ஏகு" எனினும் |