பக்கம் எண் :

720யுத்த காண்டம் 

கொண்டுவந்து  இவ்விலங்கையின்  மேல் போடுவானாயின் அதனைத்
தடுக்கவியலுமோ?
 

                                                  (4)
 

8844.

‘முறை   கெட  வென்று,  வேண்டின்  நினைந்ததே
                              முடிப்பன்; முன்னின்,

குறை இலை குணங்கட்கு; என்னோ, கோள் இலா
                                    வேதம் கூறும்
இறைவர்கள் மூவர் என்பது? எண் இலார் எண்ணமேதான்;
அறை கழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா.
 

முறைகெட   வென்ற  வேண்டின்  முன்னின்    நினைந்ததே
முடிப்பன்
- அனுமன்    முறைகெடச்    செய்ய   விரும்பினார் முன்பு
நாம்நினைந்ததையே   தன் வன்மை  மிகுதியால்  செய்து முடித்துவிடுவான்;
குணங்கட்கு  குறை  இலை  -  ஆனால்,  குணங்கட்கு அவனிடத்துக்
குறையில்லை; கோள்   இலா வேதம்  கூறும்  இறைவர்கள்  மூவர்
என்பது    என்னோ
  -   குற்றமில்லாத   வேதங்கள்    சொல்லும்
கடவுளர்கள்மூவரே  என்பது   என்ன?  எண்   இலார்   எண்ணமே
தான்
- (ஆராய்ந்து  பார்த்தால்) சிந்தனை இல்லாதவர்களின் எண்ணமே
ஆம்!அறைகழல் அனுமனோடும் நால்வரே  முதல்வர்  அம்மா! -
ஒலிக்கின்ற வீரக்கழலை உடைய அனுமனோடு முதற்கடவுளர்  நால்வரே
ஆவார்.
 

                                                  (5)
 

8845.

‘இறந்தவர் இறந்து தீர; இனி ஒரு பிறவி வந்து
பிறந்தனம்ஆகின், உள்ளேம்; உய்ந்தனம், பிழைக்கும்
                                          பெற்றி
மறந்தனம்; எனினும், இன்னம் சனகியை மரபின் ஈந்து,
                                           அவ்
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும், ஐய!
 

இறந்தவர்  இறந்து தீர - (போரில்) இறந்தவர்கள் இறந்தவர்களே
ஆக!   உள்ளேம் இனி  ஒரு பிறவி  வந்து  பிறந்தனம்  ஆகின்
உய்ந்தனம்
 -  இறவாது  உள்ள  நாம்,  புதியதொரு பிறவியில் வந்து
பிறந்தனம்   போன்று   உய்ந்திருக்கின்றோம்;   பிழைக்கும்  பெற்றி
மறந்தனம்
 -  உயிர்  பிழைத்து  வாழும்  தன்மையை  இதுவரையில்
மறந்திருந்தோம்; எனினும் ஐயா! இன்னம் சனகியை மரபின் ஈந்து -