பக்கம் எண் :

722யுத்த காண்டம் 

    

சிறுவனும் நீயும் அல்லால், ஆர் உளர், ஒருவர் தீர்ந்தார்?
வெறிது, நம்வென்றி’ என்றான், மாலி, மேல் விளைவது
                                        ஓர்வான்.
 

மறிகடல்  குடித்து  வானை  மண்ணொடும்   பறிக்க  வல்ல -
அலைகடல்    நீரையெல்லாம்    குடித்து     விட்டு    ஆகாயத்தை
மண்ணுலகத்தோடும்   சேர்த்துப்   பெயர்த்  தெடுக்கவல்ல;  எறிபடை
அரக்கர் எல்லாம் இறந்தனர்
- எறிதற்கு உரிய ஆயுதங்களை உடைய
அரக்கர்ளெல்லாம்  இறந்து  பட்டனர்;  இலங்கை  ஊரும்  சிறுவனும்
நீயும்   அல்லால்  ஆர்  உளர் ஒருவர்?  தீர்ந்தார்?
-  இலங்கை
என்கின்ற  இந்த  ஊரும்   நின்  சிறுவனாகிய  இந்திரசித்தும்   நீயும்
அல்லாமல் வேறு ஒருவர்  யார்  உளர்? எல்லோரும் இறந்து பட்டனர்;
‘நம்வென்றி வெறிது  என்றான்  மாலிமேல்  விளைவது  ஓர்வான்
- (ஆகவே) நம்  வெற்றி யெல்லாம் வெறுமையானதே’ என்று கூறினான்.
மேலே  விளையும்  செயல்   இத்தன்மைத்    தாயிருக்கும்   என்பதை
உய்த்துணர்ந்த மாலியவான்.
 

                                                   (8)
 

                                     இராவணன் மறுப்புரை
 

8848.கட்டுரை அதனைக் கேளா, கண் எரி கதுவ நோக்கி,
‘பட்டனர் அரக்கர் என்னின், படைக்கலம் படைத்த எல்லாம்
கெட்டன எனினும், வாழ்க்கை கெடாது; இனி, கிளி அனாளை
விட்டிட எண்ணியோ நான் பிடித்தது, வேட்கை வீய?
 

கட்டுரை  அதனைக்   கேளா,   கண்ணெரி   கதுவநோக்கி -
மாலியவான் கூறிய  அவ்  உறுதி மொழிகளைக் கேட்டு தன் கண்களில்
தோன்றிய தீப்பொறி  அம்மாலியவானைப்  பற்றுமாறு  சினந்து நோக்கி;
அரக்கர் பட்டனர் என்னின் படைத்த  படைக்கலம் எல்லாம்   -
அரக்கர்களெல்லாம்  இறந்து  பட்டனர்   என்றாலும்,  நாம்   படைத்த
படைக்கலங்களெல்லாம்; கெட்டன  எனினும், இனி கிளி அனாளை -
கெட்டுப்  பயனற்றன  என்றாலும்,  இனிக்   கிளிபோன்ற  சொற்களைப்
பேசுகின்ற  சீதையை;  நான்பிடித்தது  வேட்கை   வீய  வாழ்க்கை
கெடாது விட்டிட எண்ணியோ?
- நான் பற்றியது, என்