ஆசை கெட, என் உயிர் வாழ்க்கை கெடாமல் (கை) விட்டுவிட நினைத்தோ? (அன்றே என்றபடி). | (9) | 8849. | ‘மைந்தன் என்? மற்றையோர் என்? அஞ்சினிர் வாழ்வு வேட்டிர்! உய்ந்து நீர் போமின்; நாளை, ஊழி வெந் தீயின் ஓங்கி, சிந்திய மனித்தரோடு, அக் குரங்கினைத் தீர்ப்பென்’ என்றான், வெந் திறல் அரக்கர் வேந்தன். மகன் இவை விளம்பலுற்றான்: | மைந்தன் என்? மற்றையோர் என்? - (என்) மகன் என்ன? மற்றை யவர்தாம் என்ன? அஞ்சினர், வாழ்வு வேட்டிர் நீர் உய்ந்து போமின் - இவ்வாறு அச்சங்கொண்டவர்களாய் உயிர் வாழ்க்கையை விரும்பியவர்களாய் உள்ள நீங்கள் பிழைத்துப் போங்கள்; ‘நாளை ஊழி வெந்தீயின் ஓங்கி - நாளைக்கு ஊழிக்காலத்துத் தோன்றும் கொடிய வடவைத் தீப்போலப் பொங்கி; ‘சிந்திய மனித்தரோடு அக்குரங்கினைத் தீர்ப்பென்’ - எனது சேனைகளை அழித்த அம்மனிதரோடு அக்குரங்கினையும் (அனுமனை) அழித்தொழிப்பேன்’ என்றான் வெந்திறல் அரக்கர் வேந்தன், மகன் இவை விளம்பலுற்றான் - என்று கூறினான் கொடிய திறமையை உடைய அரக்கர் தம் வேந்தனாகிய இராவணன். (அதுகேட்ட அவன்) மகன் இந்திரசித்து இவற்றைச் சொல்லத் தொடங்கினான். | (10) | நிகும்பலை வேள்வி குறித்து இந்திரசித்தன் கூறுதல் | 8850. | ‘உளது நான் உணர்த்தற்பாலது, உணர்ந்தனை கோடல் உண்டேல்; தள மலர்க் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சார்த்தி, அளவு இலது அமைய விட்டது, இராமனை நீ்க்கி அன்றால்; விளைவு இலது, அனையன் மேனி தீண்டில, மீண்டது அம்மா! |
|
|
|