உணர்ந்தனை கோடல் உண்டேல் நான் உணர்த்தற் பாலது உளது - உணர்ந்து கொள்ளும் எண்ணம் இருக்குமாயின் நான் கூறத் தகுவது உளது; தளமலர்க்கிழவன் தந்த படைக்கலம் தழலின் சார்த்தி - (என்னவெனில்) இதழ்களை உடைய தாமரை மலரில் இருக்கும் பிரமன் கொடுத்த பிரமாத்திரத்தைத் (தூப) தீப வழிபாடு செய்து; அளவு இலது அமைய விட்டது இராமனை நோக்கி அன்றால் - அளவற்ற ஆற்றலுடையதாய் அமைத்துவிட்டது இராமனை நீக்கியதன்று (அவனையும் கொல்ல வேண்டுமென்றே விடுத்தேன்); விளைவு இலது, அனையன் மேனி தீண்டில, மீண்டது அம்மா! - (எனினும்) பயன் இலதாய் அந்த இராமனின் மேனியைத் தீண்டாததாய் மீண்டது (இது) பெருவியப்பாகும். | (11) | 8851. | ‘மானிடன் அல்லன்; தொல்லை வானவன் அல்லன்; மற்றும், மேல் நிமிர் முனிவன் அல்லன்; வீடணன் மெய்யின் சொன்ன, யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே,- தேன் உகு தெரியல் மன்னா!-சேகு அறத் தெரிந்தது அன்றே. | தேன் உகு தெரியல் மன்னா! - தேன் சிந்தும் மாலையை அணிந்த அரசே! மானிடன் அல்லன், தொல்லை வானவன் அல்லன் - (அவ் இராமன்) மனிதகுலத்தைச் சேர்ந்தவன் அல்லன், பழைமையான வானவர் மரபைச் சார்ந்தவனும் அல்லன்; மற்றும் மேல் நிமிர் முனிவன் அல்லன் - மற்று, மேன்மைபொருந்திய முனிவனும் அல்லன்; வீடணன் மெய்யின் சொன்ன - வீடணன் உண்மையாக ஆராய்ந்து சொன்ன; யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே - யான் எனது என்னும் செருக்கினை நினையாமல் நீங்கியுள்ள ஞானிகள் என்றும் எண்ணுதற்கு உரிய ஒப்பற்ற பரம்பொருள் என்றே; சேகு அறத் தெரிந்து - ஐயமறத் தெளிவாயிற்று. ‘அன்று’ ‘ஏ’ - அசை. | (12) | 8852. | ‘அனையது வேறு நிற்க; அன்னது பகர்தல் ஆண்மை வினையன அன்று; நின்று வீழ்ந்தது வீழ்க! வீர! |
|
|
|