| இனையல் நீ; மூண்டு யான் போய், நிகும்பலை விரைவின் எய்தி, துனி அறு வேள்வி வல்லை இயற்றினால், முடியும், துன்பம். | அனையது வேறு நிற்க - அத்தகைய உண்மை ஒருபுறம் இருக்கட்டும்; அன்னது பகர்தல் ஆண்மை வினையன அன்று - அத்தகு உண்மைகளைக் கூறித் தயங்குதல் போராண்மைச் செயலுக்குரியது அன்று; நின்று வீழ்ந்தது வீழ்க வீர நீ இனையல் - போரில் எதிர்த்து நின்று வீ்ழ்ந்தவர்கள் வீழட்டும்; வீர! நீ, அது பற்றி வருந்தாதே! மூண்டு யான் போய் நிகும்பலை விரைவின் எய்தி - யான் முனைந்து சென்று நிகும்பலை என்ற கோயிலை விரைவில் அடைந்து; துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் துன்பம் முடியும் - துன்பம் அறுதற்குக் காரணமான வேள்வியை விரைந்து தொடங்கினால், நின் துன்பம் முடியும். | (13) | இராவண்ன, நிகும்பலை வேள்வி பற்றி உசாவல் | 8853. | ‘அன்னது நல்லதேயால்; அமைதி’ என்று அரக்கன் சொன்னான்; நல் மகன், ‘உம்பி கூற, நண்ணலார் ஆண்டு நண்ணி, முன்னிய வேள்வி முற்றாவகை செரு முயல்வர்’ என்னா, ‘என், அவர் எய்தாவண்ணம் இயற்றலாம் உறுதி?’ என்றான். | ‘அன்னது நல்லதேயால்; ‘அமைதி’ என்று அரக்கன் சொன்னான் - (நீ கூறுகின்ற) அது நல்லதே; நிகும்பலையில் வேள்வி அமைத்துச் செய்க’ என்று இராவணன் கூறினான்; நல்மகன், ‘உம்பிகூற, நண்ணலார் ஆண்டு நண்ணி - அது கேட்ட அவனது நல்லமகனாகிய இந்திரசித்து, ‘உன் தம்பி வீடணன் இந்த இரகசியத்தைக் கூறக்கேட்டுப் பகைவர் அந்நிகும்பலையை அடைந்து; ‘முன்னிய வேள்வி முற்றாவகை செரு முயல்வர்’ என்னா - நாம் கருதிய வேள்வி முற்றுப் பெறாதபடி போர்செய்ய முயல்வார்களே என்று கூறினான்; ‘அவர் எய்தா வண்ணம் இயற்றலாம் உறுதி என்?’ என்றான் - அவ்வாறு அப்பகைவர்கள் |
|
|
|