வராதபடி செய்யத்தக்க உபாயம் என்ன’ இராவணன் வினவினான். | (14) | இந்திர சித்தன் உரை | 8854. | ‘சானகி உருவமாகச் சமைத்து, அவள் தன்மை கண்ட வான் உயர் அனுமன்முன்னே, வாளினால் கொன்று மாற்றி, யான் நெடுஞ் சேனையோடும் அயோத்திமேல் எழுந்தேன் என்னப் போனபின், புரிவது ஒன்றும் இலாது அவர் துயரம் பூண்பார். | சானகி உருவமாகச் சமைத்து - சீதையின் உருவமாக மாயையினால் செய்து கொண்டு; அவள் தன்மை கண்டவான் உயர் அனுமன் முன்னே - அச்சீதையின் தன்மையை முன்னமே வந்து கண்டுள்ள, மிக்க உயர்வுள்ள அனுமனுக்கு முன்னே சென்று; வாளினால் கொன்று மாற்றி - அவளைக் கொன்று உயிரைப் போக்கிவிட்டு; யான் நெடுஞ்சேனையோடும் அயோத்தி மேல் எழுந்தேன் என்ன - ‘யான் நெடிய சேனையோடும் அயோத்தியின் மேல் போகின்றேன்’ என்று கூறி; போனபின், புரிவது ஒன்றும் இலாது அவர் துயரம் பூண்பார் - அத்திசை நோககிப் போயினதாகப் போக்குக் காட்டிவிட்டால், ‘செய்வது ஒன்றும் அறியாதவராய் (திகைத்து) அவர்கள் துயரங்கொள்வார்கள். | அயோத்தி மேல் எழுகின்றேன் என நிகழ்காலத்தில் கூற வேண்டியதை விரைவுபற்றி ‘எழுந்தேன்’ என இறந்தகாலத்தில் கூறினான். | (15) | 8855. | ‘“இத் தலைச் சீதை மாண்டாள்; பயன் இவண் இல்லை” என்பார், அத் தலை, தம்பிமாரும், தாயரும், அடுத்துளோரும், உத்தம நகரும், மாளும் என்பது ஓர் வருத்தம் ஊன்ற, பொத்திய துன்பம் மூள, சேனையும் தாமும் போவார். | “இத்தலைச் சீதை மாண்டாள், பயன் இவண் இல்லை” என்பார் - “இவ்விடத்தில் சீதையோ மாண்டு போனாள்; இனி |
|
|
|