இங்கு நின்று (போர்செய்வதில்) பயன் இல்லை” என்று கருதும் இராமஇலக்குவர்; அத்தலை தம்பிமாரும், தாயரும் அடுத்துளோரும்- அவ்விடத்துத் தம்பிமாரும், தாயரும், அடுத்துள்ள சுற்றத்தோரும்; உத்தம நகரும் மாளும் என்பது ஓர் வருத்தம் ஊன்ற - சிறந்த அயோத்தி நகரத்தில் உள்ள மக்களும் (இந்திரசித்தனால்) உயிர் ஒழிந்து போவார்கள்’ என்பதாகிய பெருந்துன்பம் மனதில் ஆழ்ந்து பற்ற; பொத்திய துன்பம் மூள, சேனையும் தாமும் போவார் - அங்ஙனம் கலந்த துயரம் மேன்மேல் வளர்தலால் சேனையும் தாமும் அயோத்திக்குப்போய் விடுவார்கள். | (16) | 8856. | ‘போகலர் என்ற போதும், அனுமனை ஆண்டுப் போக்கி, ஆகியது அறிந்தால் அன்றி, அருந் துயர் ஆற்றல் ஆற்றார்; ஏகிய கருமம் முற்றி, யான் இவண் விரைவின் எய்தி, வேக வெம் படையின் கொன்று, தருகுவென் வென்றி’ என்றான். | போகலர் என்றபோதும் அனுமனை ஆண்டுப் போக்கி - அயோத்திக்கு அவர்கள் போக வில்லை ஆயினும் அனுமனையேனும் அங்கே அனுப்பி;ஆகியது அறிந்தால் அன்றி அருந்துயர் ஆற்றல் ஆற்றார் - அங்கு நிகழ்ந்ததை அறிந்தால் அல்லது, தாங்குதற்கரிய இத்துன்பத்தைத் தாங்க மாட்டார்கள்; யான்ஏகிய கருமம் முற்றி இவண் விரைவின் எய்தி - நான் (அதற்குள்) சென்ற காரியத்தை (வேள்வியை) முடித்துக் கொண்டு விரைவாக இங்குவந்து; வேகவெம் படையின் கொன்று தருகுவென் வென்றி என்றான் - ‘வேகமுடைய கொடிய படைக்கலத்தால் அப்பகைவரைக் கொன்று வெற்றியைத் தருவேன் என்று கூறினான். | (17) | மாயாசீதை அமைக்க மேகநாதனும் இலங்கையை எரியூட்ட வானரங்களும் செல்லுதல் | 8857. | ‘அன்னது புரிதல் நன்று’ என்று அரக்கனும் அமைய, அம் சொல் பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான்; |
|
|
|