பக்கம் எண் :

728யுத்த காண்டம் 

இன்னது இத் தலையது ஆக, இராமனுக்கு இரவி செம்மல்,
‘தொல் நகர்அதனை வல்லைக் கடி கெடச் சுடுதும்’ என்றான்.
 

‘அன்னது பிரிதல் நன்று’ என்று அரக்கனும் அமைய - ‘அந்தச்
செயல்    செய்தல்   நல்லதே’    என்று   இராவணனும்   உடன்பட;
அம்சொல்பொன் உரு    அமைக்கும்    மாயம்    இயற்றுவான்
மைந்தன்போனான்
- அழகிய சொல்லையுடைய சீதையின்  உருவத்தை
அமைக்கும்  மாயத்தைச் செய்வதற்கு  அவன்  மகனான  இந்திரசித்தும்
போயினான்;  இத்தலையது  இன்னது  ஆக  இராமனுக்கு   இரவி
செம்மல்
-  இவ்விடத்து   இத்தகைய   செயல்  நிகழ,  இராமனுக்குக்
கதிரவன்  மகனான  சுக்கிரீவன்;   தொல்நகர்  அதனை   வல்லைக்
கடிகெடச் சுடுதும்’ என்றான்
  -   பழமையான   இலங்கை   நகரை
விரைவாக  அதன் சிறப்புக்கெடுமாறு எரிப்போம் என்று கூறினான்.
 

                                                  (18)
 

8858.‘அத் தொழில் புரிதல் நன்று’ என்று அண்ணலும் அமைய,
                                          எண்ணி,
தத்தினன், இலங்கை மூதூர்க் கோபுரத்து உம்பர்ச்
                                       சார்ந்தான்;
பத்துடை ஏழு சான்ற வானரப் பரவை பற்றிக்
கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது, எவ் உலகும் காண.
 

அத்தொழில் புரிதல்  நன்று  என்று   அண்ணலும்   எண்ணி
அமைய
- ‘அச்செயலைச்  செய்தல்  நல்லதே’  என்று பெருமை மிக்க
இராமனும்   சிந்தித்து    உடன்பட;   தத்தினன்  இலங்கை  மூதூர்
கோபுரத்து உம்பர்ச் சார்ந்தான்
- சுக்கிரீவன், தாவி, இலங்கையாகிய
பழைய  நகரின்  கோபுரத்தின்   உச்சியை   அடைந்தான்;  பத்துடை
ஏழுசான்ற வானரப் பரவை
 -  எழுபது  வெள்ளம் என்று அமைந்த
வானர சேனையாகிய கடல்;  பற்றி  எவ்  உலகும்  காண  ஓர் ஓர்
கொள்ளி கைத்தலத்து எடுத்தது
- அவனைப்பின்  பற்றி (ஒவ்வொரு
வானரமும்) எவ்வுலகமும் காணுமாறு ஒவ்வொரு கொள்ளியைக் கையில்
எடுத்துக்கொண்டது.
 

                                                  (19)