| தான் ஒத்தது சொல்லுதி; தா விடை’ என்- றான்; இத் திறம் உன்னி அரக்கர் பிரான்,
|
சேனைக் கடலோடு இடை செல்க எனினும் - படைக் கடல் சூழ இடையில் (போருக்குச்) செல்க என்று கட்டளை இட்டாலும் தனி ஏகு எனினும் - அவ்வாறன்றித் தனியாகவே (போருக்குச்) செல் என்று கட்டளை இட்டாலும்; யான் இப்பொழுதே - நான் இக்கணத்தே (அதுசெய்வேன்); தான் ஒத்தது சொல்லுதி - இரண்டனுள் பொருத்தமானதைச் சொல்வாய்; விடை தா என்றான் - விடை தருக (என்று அதிகாயன்) கூறினான்; இத்திறம் உன்னி அரக்கர் பிரான் - இவ்வாறு தன் மகன் கூறிய தன்மையை எண்ணி அரக்கர் தலைவனாகிய இராவணன் ஏவினனால் (15) என்பதோடு முடியும்.
|
தான் - அசை, சேனைக்கடல் - உருவகம், செல்க - வியங்கோள் வினைமுற்று. தா - தாவென் கிளவி ஒப்போன் கூற்று. மகன் தந்தையிடம் ஒப்போனாகப் பேசுவதால் இச்சொல் வந்தது.
|
(13)
|
7740. | ‘சொன்னாய், இது நன்று துணிந்தனை; நீ அன்னான் உயிர் தந்தனையாம் எனின், யான், பின் நாள், அவ் இராமன் எனும் பெயரான்- தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால்.
|
நீ துணிந்தனை நன்று இது சொன்னாய் - நீ மனத்தில் துணிந்தனையாகி நல்ல சொற்களாகிய இவற்றைச் சொன்னாய்; அன்னான் உயிர் தந்தனையாம் எனின் - அந்த இலக்குவனுடைய உயிரை வாங்கித் தந்தாய் என்றால்; யான் பின்நாள் - நான் பின் வருநாளில்; அவ் இராமன் எனும் பெயரான் - அந்த இராமன் என்னும் பெயர் கொண்டவனுடைய; தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால் - அருமையான உயிரைக் கொண்டு (என்பகை) முடிப்பேன்.
|
துணிந்தனை - முற்றெச்சம், ஆர் உயிர் - பண்புத்தொகை.
|
(14)
|
7741. | ‘போவாய் இதுபோது-பொலங் கழலோய்!- மூவாயிர கோடியரோடு, முரண் கா ஆர் கரி, பரி காவலின்’ என்று, ஏவாதன யாவையும் ஏவினனால் |