பக்கம் எண் :

730யுத்த காண்டம் 

வஞ்சனை     மன்னன்  வாழும் இலங்கை - வஞ்வனை செய்த
இராவணன்  வாழ்கின்ற இலங்கையின் மீது; குஞ்சரம் அன்னார் வீசிய
கொள்ளி
- யானை போன்ற வானரவீரர்  வீசிய கொள்ளிகள்; அஞ்சன
வண்ணன் ஆழியில்ஏவும்
- மைவண்ணனான  இராமன் சினங்கொண்டு
கடலின் மீது எய்த; செஞ்சரம் என்ன மென் மேல் சென்றன - சிவந்த
அக்கினியாத்திரங்களைப் போல மேலும் மேலும் தொடர்ந்து சென்றன.
 

                                                  (22)
 

8862.கை அகல் இஞ்சிக் காவல் கலங்க,
செய்ய கொழுந் தீ சென்று நெருங்க,
ஐயன் நெடுங் கார் ஆழியை அம்பால்
எய்ய எரிந்தால் ஒத்தது, இலங்கை.
 

கை அகல் இஞ்சிக் காவல் கலங்க - இடமகன்ற கோட்டை மதிற்
காவல் கலங்குமாறு;  செய்ய  கொழுந் தீ சென்று நெருங்க - சிவந்த
கொழுவிய   நெருப்பானது   சென்று   நெருங்குவதால்;  இலங்கை  -
இலங்கை  நகரமானது;  ஐயன்  நெடுங்கார்  ஆழியை  அம்பால் -
இராமன்,  நெடிய கருங்கடலைத் தனது கணைகளால்; எய்ய  எரிந்தால்
ஒத்தது
- எய்த காலத்து எரிந்த தோற்றம் போல் காட்சியளித்தது.
 

                                                  (23)
 

8863.பரம் துறு தொல் பழுவத்து எரி பற்ற,
நிரல் துறு பல் பறவைக் குலம், நீளம்
உரற்றின, விண்ணின் ஒலித்து எழும் வண்ணம்
அரற்றி எழுந்தது, அடங்க இலங்கை.*
 

பரல் துறு தொல்பழுவத்து எரி பற்ற - பரற்கற்கள் நெருங்கியுள்ள
பழமையான காட்டில்  தீ   பற்றிக் கொள்ள; நிரல் துறு பல் பறவைக்
குலம்
 -  வரிசையாக  நெருங்கி வாழ்கின்ற  பலபறவைக்  கூட்டங்கள்;
நீளம் உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம் - தம் கூட்டின்
முன்பு   அரற்றினவாய்ப்   பின்பு    வானத்தில்  ஒலித்துக்  கொண்டு
எழுந்தது போல;  இலங்கை  அடங்க அரற்றி  எழுந்தது - இலங்கை
நகர அரக்கர் கூட்டம் முழுவதும் புலம்பிக்கொண்டு எழுந்தது.
 

நீளம் - கூடு.
 

                                                  (24)