பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 731

8864.மூஉலகத்தவரும், முதலோரும்
மேவின வில் தொழில் வீரன் இராமன்,
தீவம் எனச் சில வாளி செலுத்த,
கோவுரம் இற்று விழுந்தது, குன்றின்.
 

மூஉலகத்தவரும்   முதலோரும் - மூன்று உலகத்து வாழ்வோரும்
முதற்கடவுளர் மூவரும்;  மேவின வில்  தொழில் வீரன் இராமன் -
விரும்பிய  வில்தொழில்  வீரனாகிய இராமன்; தீவம் எனச் சில வாளி
செலுத்த
 -  தீபங்களைப்  போன்ற  சில அம்புகளைச் செலுத்தியதால்;
கோவுரம்  இற்று குன்றின் விழுந்தது - இலங்கைக் கோபுரம் இடிந்து
குன்றைப் போல விழுந்தது.
 

                                                  (25)
 

             மீண்ட அனுமன் ஆர்ப்பொலியால் இலங்கை நடுங்குதல்
 

8865.இத் தலை, இன்ன நிகழ்ந்திடும் எல்லை,
கைத்தலையில் கொடு காலின் எழுந்தான்,
உய்த்த பெருங் கிரி மேருவின் உப் பால்
வைத்த, நெடுந் தகை மாருதி வந்தான்.
 

இத்தலை  இன்ன நிகழ்ந்திடும் எல்லை - இலங்கையில் இவ்வாறு
நிகழ்ந்து  கொண்டிருக்கையில்;  உய்த்த  பெருங்கரி  கைத்தலையில்
கொடு
  -   (முன்பு)   கொண்டுவந்த   பெரிய  மருத்து  மைலையக்
கையினிடத்தில் கொண்டு; காலின் எழுந்தான் மேருவின் உப்பால் -
காற்றைப்    போல    விரைந்தெழுந்து    (சென்று)   மேருமலையின்
அப்புறத்தில்;  வைத்த  நெடுந்தகை  மாருதி  வந்தான் -  மீண்டும்
கொண்டுபோய்  வைத்த  நெடிய  தன்மையனாகிய  அனுமன்  திரும்பி
வந்தான்.
 

                                                  (26)
 

8866.அறை அரவக் கழல் மாருதி ஆர்த்தான்;
உறை அரவம் செவி உற்றுளது, அவ் ஊர்;
சிறை அரவக் கலுழன் கொடு சீறும்
இறை அரவக் குலம் ஒத்தது, இலங்கை
 

அறை  அரவக்  கழல்    மாருதி    ஆர்த்தான் - ஒலிக்கின்ற
வீரக்கழலை அணிந்த  அனுமன்  ஆரவாரித்தான்; உறை அரவம் அவ்
ஊர் செவி உற்றுள்ளது
- அந்தச் செறிந்த ஒலி