8869. | ‘வந்து, இவள் காரணம் ஆக மலைந்தீர்; எந்தை இகழ்ந்தனன்; யான் இவள் ஆவி சிந்துவென்’ என்று செறுத்து, உரை செய்தான்; அந்தம் இல் மாருதி அஞ்சி அயர்ந்தான். |
“இவள் காரணம் ஆக வந்து மலைந்தீர் - இவளைக் காரணமாகக்கொண்டு இங்கேவந்து போர் செய்தீர்கள்; எந்தை இகழ்ந்தனன் - இப்பொழுது என்தந்தை இவளை வேண்டாம் என இகழ்ந்து ஒதுக்கி விட்டான்; யான் இவள் ஆவி சிந்துவென்” என்று செறுத்து உரை செய்தான் - எனவே நான் இவளுடைய உயிரைப் போக்குவேன் என்று வெகுண்டு சொன்னான்; அந்தம் இல் மாருதி அஞ்சி அயர்ந்தான் - முடிவில்லாதவனாகிய (சிரஞ்சீவியான) அனுமன் அஞ்சிக் சோர்ந்தான்;. |
(30) |
8870. | ‘கண்டவளே இவள்’ என்பது கண்டான், ‘விண்டதுபோலும், நம் வாழ்வு’ என வெந்தான்; கொண்டு, இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான், ‘உண்டு உயிரோ!’ என, வாயும் உலர்ந்தான். |
‘கண்டவளே இவள்’ என்பது கண்டாள் - (அப்பொழுது அனுமன்) (முன்பு அசோகவனத்தில் தன்னால்) காணப்பெற்றவளே இவள் என்பதை உணர்ந்தான்; நம் வாழ்வு விண்டது போலும் என வெந்தான்- ‘நம்வாழ்வு அழிந்தது போலும்’ என மனம் வெந்தான்; கொண்டு இடைதீர்வது ஓர்கோள் அறிகில்லான் - அச்சீதையை அவன் கையிலிருந்து விடுவித்துக் கொண்டு போவதொரு நெறியை அறிய இயலாதவனாய்; ‘உயிர் உண்டோ?’ எனவாயும் உலர்ந்தான் - உயிர் உண்டோ? எனக் கண்டவர் ஐயுறுமாற வாயும் உலரப் பெற்றான். |
(31) |
8871. | ‘யாதும் இனிச் செயல் இல்’ என எண்ணா, ‘நீதி உரைப்பது நேர்’ என, ஓரா, ‘கோது இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய்! மாதை ஒறுத்தல் வசைத் திறம் அன்றோ? |
‘யாதும் இனிச்செயல் இல்’ என எண்ணா - (அனுமன்) இனி நாம் செய்யத் தக்க செயல் ஏதும் இல்லை என எண்ணியும்; ‘நீதி உரைப்பது நேர்’ என ஓரா - நீதி சொல்வதே நேர்மையான உபாயம் |