பக்கம் எண் :

734யுத்த காண்டம் 

என   ஆராய்ந்து  அறிந்தும்;  கோதுஇல் குலத்து  ஒரு  நீ குணம்
மிக்காய்
 -  குற்றமில்லாத குலத்தில்  பிறந்த ஒப்பற்ற நீ  குணங்களால்
உயர்ந்தவன்!  மாதை  ஒறுத்தல்  வசைத்திறம்  அன்றோ -   ஒரு
பெண்ணைக் கொல்லுதல் என்பது  பழிச்  செயல் அல்லவோ?
 

                                                 (32)
 

8872.

‘நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய்;
நூல்முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய்;
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ,
மால் முகம் உற்று, ஒரு மாதை வதைத்தல்?
 

நான் முகனுக்கு  ஒரு  நால்வரின் வந்தாய் - (நீ) பிரமனுக்கு ஒரு
நான்காவது   தலைமுறையினனாக   வந்து  பிறந்துள்ளாய்; நூல்முகம்
முற்றும் நுணங்க உணர்ந்தாய்
- நூல்களில் உள்ள சிறந்த  கருத்துகள்
எல்லாவற்றையும்  நுட்பமாக உணர்ந்துள்ளாய்; மால் முகம் உற்று ஒரு
மாதை  வதைத்தல்
- அறிவு  மயங்கி ஒரு பெண்ணைக் கொல்லுதல்;
பால்முகம்   உற்ற  பெரும்  பழி   அன்றோ  -  பகுக்கப்பெற்ற
பழிகளில் முதன்மையான பெரிய பழியல்லவோ?
 

                                                 (33)
 

8873.

‘மண் குலைகின்றது; வானும் நடுங்கிக்
கண் குலைகின்றது; காணுதி, கண்ணால்;
எண் குலைகின்றது இரங்கல் துறந்தாய்!
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ?
 

மண் குலைகின்றது - (நீ செய்யும் செயலைக் கண்டு)  மண்ணுலகம்
நடுங்குகின்றது.;    வானும்    நடுங்கிக்   கண்    குலைகின்றது -
வானுலகமும் நடுங்கிக்கண்  குலைகின்றது;   கண்ணால்   காணுதி  -
இவற்றை    நீ   கண்ணால்  காணுகின்றாய்;  இரங்கல்  துறந்தாய் -
(இருப்பினும்) இரக்கம என்னும்  பண்பினைக்  கைவிட்டுவிட்டாய்! எண்
குலைகின்றது
 - (இச்செயல் கண்டு)  என் எண்ணமும் நடுங்குகி்ன்றது!
பெண்   கொலை   செய்கை   பெரும்பழி  அன்றோ  -  பெண்
கொலை செய்வது பெரும் பழிக்குக் காரணம் அல்லவா?
 

                                                 (34)