பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 735

8874.

‘என்வயின் நல்கினை ஏகுதி என்றால்,
நின் வயம் ஆம், உலகு யாவையும்; நீ நின்
அன்வயம் ஏதும் அறிந்திலை; ஐயா!
புன்மை தொடங்கல்; புகழ்க்கு அழிவு’ என்றான்.*
 

என்வயின்  நல்கினை  ஏகுதி  என்றால்  -  இந்தச்   சீதையை
என்னிடத்தில்  கொடுத்துச்  சென்றால்; உலகம் யாவையும் நின் வயம்
ஆம்  
-  இவ்வுலகம்  எல்லாம்  உன்  வசத்ததாம்! நீநின் அன்வயம்
ஏதும்  அறிந்திலை
 -  நீ  உன்னுடைய  குலப்பெருமையை  சிறிதும்
உணர்ந்தாயில்லை!   ஐயா!  புன்மை  தொடங்கல் புகழுக்கு அழிவு
என்றான்
 - ஐயா! புன்மையான இச்செயலைச் செய்யத்  தொடங்காதே!
தொடங்கினால் நின் புகழ்க்கு அழிவு உண்டாகும் என்றான்.
 

                                                 (35)
 

                                      இந்திரசித்தன் மறுமொழி
 

8875.

‘எந்தையும் இந்த இலங்கை உளோரும்,
உய்ந்திட, வானவர் யாவரும் ஓடச்
சிந்துவென் வாளினில்’ என்று செறுத்தான்,
இந்திரசித்தவன் இன்ன இசைத்தான்:
 

எந்தையும்    இந்த  இலங்கை  உளோரும் - என்  தந்தையும்
இந்த இலங்கையில்   உள்ளவர்களும்;  உய்ந்திட, வானவர் யாவரும
ஓடச்
- நல்வாழ்வு    பெறவும்,     வானத்தவர்கள்      அச்சமுற்று
ஓடிவிடவும்;  சிந்துவென்   வாளினில்,   என்று   செறுத்தான்  -
(சீதையை) வாளினில்வெட்டுவேன்  என்று  வெகுண்டவனாய்;  இந்திர
சித்தவன்   இன்ன    இசைத்தான்
  -   இந்திரசித்து   (மேலும்)
இத்தகைய  சொற்களைச் சொல்லானான்.
 

                                                 (36)
 

8876.

‘போமின், அடா! வினை போயது போலாம்;
ஆம் எனில், இன்னும் அயோத்தியை அண்மி,
காமின்; அது இன்று கனல் கரி ஆக
வேம்; அது செய்து, இனி மீள்குவென்’ என்றான்.
 

அடா!  வினை  போயது  போலாம்? -  அடா  குரங்கே!  என்
செய்கை இவள்  கொலையோடு முடிந்துவிட்டதோ? (இல்லை); போமின்,
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி
- நீங்கள்